Sunday, April 8, 2012

ஈ -வேஸ்ட் வாங்கலையோ ஈ-வேஸ்ட்!!!

Mobile Company Nokia, Samsung, Sony, LG, Motorola, Apple iPhone , Blackberry...

Facilities 3G, dual sim, camera, music player, Bluetooth, Internet, Email....

Electronics Company Onida, Sony, Toshiba, LG, Samsung, Nikon, Fuji, Cannon, Bose, Apple..

Facilities LCD TV, Plasma TV, digital camera,video camera, iPod, iPad, music system, home theater

இப்படி புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கிறது ...தினமும் புது புது மாடல் கள், இன்னைக்கு விட்டு நாளைக்கு வாங்கினால் இன்னும் நல்ல  மாடல் கிடைக்குமே..ஏங்கும் இளைஞர் நெஞ்சங்கள்.


புதுசா லேட்டஸ்ட் ஆ இருந்தா தான் எல்லாரும் மதிப்பாங்க இல்லாட்டி யாரும் மதிக்க மாட்டாங்க!! , இன்றைய உலகம் இதுதான்.

சரி, ஓல்ட் மாடல் செல் போன்களும், டிவிக்களும் என்னவாகும்? அவைகள் எல்லாம் பழைய electronics கடைக்கோ அல்லது குப்பை தொட்டிக்கோ போகப்படும்...



அங்கு. இருந்து அவை எங்கே போகின்றன என்னவாகின்றன?  யாருக்கு கவலை? எனக்கு புது செல் போன் வந்தா போதும்.

நம்ம ஊரு குப்பை போதாதென்று வெளிநாடுகளும் இதனை போன்ற இ-வேஸ்ட் கலை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கின்றது.



இப்படி தூக்கி எறியப்படும் cell போன் களும்  டிவிக்களும், அதில் இருக்கும் இரும்பு, அலுமினியம் போன்ற பொருட்களுக்காக குப்பை பொறுக்குபவர்களால் பொறுக்க படுகின்றன. பின்னர் அதில் இருக்கும் உலோகங்கள் எல்லாம் எடுக்ககப்பட்ட பின்னர் எஞ்சி இருப்பது Integral Circuit & wires

சரி அவை என்னவாகின்றன?

வேறென்ன.? எரிக்கப்படுகின்றன..

ஆனால் இப்படி எரிப்பவர்கள் அந்த circuit இல் Cadmium, lead நச்சு பொருட்கள் இருக்கின்றன , அவை சூழ்நிலைக்கும், தமக்கும் கேடு விளைவிப்பவை என்று அறிவார்களா.

அதனை எரிக்கும் ஏழைகளையும் விடுங்கள்.. அவர்கள் வயிற்று பிழைப்பிற்க்காக வேறு வழி இன்றி இதனை செய்கிறார்கள்.

ஆனால் ..அப்படி எரியூட்டப்படும் இடங்களுக்கு அருகில் வசிப்பதால் தமக்கும் அந்த கேடு விளையும் என்று பொது மக்கள் அறிவார்களா?


இல்லை எந்த வேகத்தில் மார்க்கெட்டிங் செய்து பொருட்களை விற்கின்றோமே அதில் கொஞ்ச அளவாவது ப்ரோபர் டிஸ்போசல் முறைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று கம்பெனி கள்தான் செய்யுமா..

இல்லை...இந்திய மிளிர்கிறது என்று விளம்பரபடுத்தும் அரசாங்கம் , இப்படியே போனால் இந்தியா வியாதிக்கூடமாகிவிடும் என்று அறிந்து, இ-வேஸ்ட் பற்றியும் ரி சைக்ளிங் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றுமல்லாமல் அதற்குரிய நடவடிக்கைகளும் துரிதமாக எடுக்க வேண்டும் என்பதை அரசாங்கம் அறியுமா?

God only knows!

Photos: Google Images

Saturday, April 7, 2012

அடிக்கடி கோக், பெப்ஸி குடிப்பவரா நீங்கள்?




அடிக்கடி கோக், பெப்ஸி குடிப்பவரா நீங்கள்?, அதன் நிறமும் சுவையும் மறக்க முடியாதது என்று நினைப்பவரா, எல்லாவற்றுக்கும் ”ஹாவ் எ கோக்” என்று சொல்பவரா நீங்கள்..அப்படி என்றால் உங்களுக்கு கான்சர் வரும் வாய்ப்பு அதிகம்.. எப்படி என்று கேட்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.


Center for Science in the Public Interest (CSPI) சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, கோக் மற்றும் பெப்ஸியில் இருக்கும் காரமல் கலருக்காக சேர்க்கப்படும்  4-methylimidazole (4-MEI) and 2-methylimidazole (2-MEI) போன்ற காரமல் கலரிங் ஏஜெண்ட்ஸ் கார்ஸினோஜெனிக் எனப்படும் கான்ஸரை தூண்டும் பொருள்கள் என கண்டறிய பட்டிருக்கின்றன.


http://www.cbsnews.com/8301-504763_162-57391560-10391704/chemical-found-in-cola-causes-cancer-watchdog-warns-what-does-fda-say/


http://www.dailymail.co.uk/news/article-2112335/Coke-Pepsi-change-recipe-avoid-putting-cancer-warning-labels.html

http://healthcarenewsblog.com/coke-and-pepsi-blink-will-tone-down-dubious-caramel-coloring/


இந்த அபாயமான கலரிங் ஏஜண்ட்ஸ் அதிக அளவில் கோக், பெப்ஸி போன்ற குளிர் பானங்களில் இருப்பதால் இங்கிருக்கும் கலிபோர்னியா மாகானத்தில் இந்த கலரிங் ஏஜெண்ட்ஸ் தடை செய்யப்பட்டு இருக்கிறது.
இதே போல பல மாகானங்களும் தடை செய்யபோவதாக அறிவித்ததால் பெப்சி, மற்றும் கோக் கம்பெனிகள் இந்த கலரிங் பொருளை மாற்றுவதாக இங்கு அறிவித்திருக்கிறார்கள்.



இது இந்தியாவில் இன்னும் அமல் படுத்த படவில்லை..இந்தியாவில் இளைஞர்களிடையே அதிக பாப்புலராக இருக்கும் இந்த காலத்தில் இந்திய மக்கள் நலன் கருதி அரசாங்கம் உடனடியாக இந்த கான்சர் ஏஜெண்டை தவிர்க்குமாறு கோக் மற்றும் பெப்ஸி கம்பெனிகளை வலியுறுத்த வேண்டும்..இல்லையேல் கான்சர் தாக்கம் அதிகரிக்கலாம்.

நன்றி.

படங்கள் : நன்றி கூகுள்.



Friday, April 6, 2012

வளர்சிதை மாற்றம் 

"லீவு எடுத்தாச்சு ஏதாவது பழைய படம் பாக்கலாம்" சொன்னது மனசு,
சிறுவயதில் நான் ரசித்த படம் ஒன்று டிவியில் வர  
அந்த படத்த சிறிது நேரம் கூட பார்க்க முடியல.
சிறு வயதில் பார்த்து ரசித்த அதே காட்சிகளும் செண்டிமெண்ட் களும்
இப்போது பார்க்க மனம் வெறுக்கிறதே ஏன்? 

கட் ஷு வும் ஜீன்சும் போடவேண்டும்
என்று ஏங்கிய காலம் போய்,
தினமும் அதை பார்க்கவே
வெறுப்பு ஏற்படுவதும் ஏன் ? 

ஊரில் நடக்கும் சித்திரை திருவிழாவின் போது
சாமி பார்க்க வா என்று அம்மா அழைத்தாலும்
போம்மா நான் படிக்கணும்னு சொல்லிட்டு டிவி பார்த்த காலம் போய் ,
இப்போ மதுரையை பத்தி யாரு கேட்டாலும்
சித்திரை திருவிழாவை பத்தி சொல்லுறது ஏன்?

அதிரவைக்கும் சத்தத்துடன் கலந்த இசையையும்
அவசர உலகையும் ரசித்த எந்தன் மனம்
இப்போது அமைதியான புல்லாங்குழல் இசையையும்
இயற்கையையும் விரும்புவது ஏன்? 

அறிவியலையும், வரலாற்றையும் வெறுத்த காலம் போய்
இப்போது  மாங்கு மாங்கென்று வரலாற்றை படிக்கவும்
அறிவியலை அறியவும் முனைப்பு ஏற்படுவது ஏன்? 

மனிதனால் எல்லாம் முடியும் என்று இறுமாந்திருந்த காலம் போய்,
நம்மால் எதுவும் முடியாது என்ற ஞானம்
இப்போது தோன்றுவது ஏன்? 

காருக்கும் கரன்சிக்கும் ஆசைப்பட்ட காலம் போய்
எல்லாம் இருந்தும் எதுவுமே நிலையானததல்ல
என்ற எண்ணம் தோன்றுவது ஏன் ?

எதற்காக வந்தோம், என்ன செய்ய போகிறோம்
என்று நிறைய கேள்விகள் தினமும் என்னை துளைக்க
எனக்குள்ளே தான் எத்தனை வளர்சிதை மாற்றங்கள்!!!