Thursday, December 31, 2015

சென்று வருக 2015, வருக வருக 2016!

2015 வருடம் ஓடி விட்டது. திரும்பி பார்க்கும் போது, நிறைய பாசிடிவ் மற்றும் சில நெகடிவ் விஷயங்கள்.
நிறைய புத்தகங்கள் படிக்க முடியவில்லை. ஆனால் நிறைய வாசித்து இருக்கிறேன்.
ஆனாலும் இப்பொழுதெல்லாம் நிறைய podcast அல்லது புக் ஐ youtube மூலம் நிறைய கேட்க நேர்ந்தது.

சமீபத்தில் கேட்ட podcast ராபின் ஷர்மா அவர்களின் "Extradinary leadership" ஒலி வடிவில் கேட்க நேர்ந்தது. அருமையான விளக்கம். சாம்பிள் இங்கே உங்களுக்காக.




என்னுடைய மற்ற பொழுது போக்குகள் எதனையும் இந்த வருடம் செய்ய இயலவில்லை. ஒரே ஒரு முறை வாட்டர் கலர் படம் வரைந்ததை தவிர. நான் வரைந்த துகான் பறவை இங்கே. மோசமாக வரவில்லை என்பது என் எண்ணம்.


நிறைய பதிவுகள் எழுத நேர்ந்தது. அதற்காகவே நிறைய வாசிக்க நேர்ந்தது.

ஒரு ஆராய்ச்சி கட்டுரை வெளியிடவும், ஒரு கருத்தரங்கில் பேசவும் வாய்ப்பு கிடைத்தது. முதுகில் குத்திய என்னுடைய மேன்டோர் ம் எனக்கு நிறைய பாடங்கள் கற்று கொடுத்து சென்று இருக்கிறார்.
புது வேலை அடுத்த வாரம் முதல் துவங்குகிறது. புது வருடம் புது நம்பிக்கை புது சவால்கள் என்று இப்பொழுதே வரிசை கட்டி நிற்கின்றன. இருப்பினும் எல்லாவற்றையும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

இந்த வருடம் முழுதும் பதிவுகளில் என்னுடன் பயணித்த தட்டிகொடுத்த, சில சமயங்களில் குட்டிய அனைவருக்கும் நன்றிகள். உங்களின் வாசிப்புகளும் கருத்துகளும் மட்டுமே எங்களை போன்ற எழுதுபவர்களுக்கு உற்சாகம் தருபவை. என்னால் பல நேரங்களில் வரும் பின்னூட்டங்களுக்கு பதில் எழுத நேரம் இருப்பதில்லை என்றாலும் அனைத்து பின்னூட்டங்களையும் வெளியிடுவதற்கு முன்பு படித்து, உணர்ந்து சில சமயங்களில்  சம்பந்தமானவற்றை மட்டுமே வெளியிட்டு இருக்கிறேன்.

படித்த, உற்சாகபடுத்திய என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி. உங்களின் வாசிப்பும் உற்சாகமுமே என்னை இன்னும் பதிவெழுத வைக்கிறது. புது வருடத்தில் முடிந்தவரை வார இறுதி நாட்களில் எழுத முயற்சிக்கிறேன்.

அனைவருக்கும் புத்தாண்டு 2016 நல்வாழ்த்துக்கள். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க இந்த வருடத்தில் கடவுள்/இயற்கை அருள் புரியட்டும்.

நன்றி.


Sunday, December 27, 2015

மர்லின் மன்றோ மற்றும் திருமணதிற்கு வெளியே தொடர்புகள்!

நிறைய நாட்களாகவே இதனை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தது உண்டு. ஆனால் சென்சிடிவ்  விஷயம், சரியாக எடுத்து கொள்ள படுமா இல்லையா என்ற குழப்பத்தில் எதுக்கு வம்பு என்று விட்டு விட்டேன். ஆனால் தற்செயலாக மேடம் துச்சாத் ம்யூசியதத்தில் மர்லின் மன்றோ மெழுகு சிலை பார்க்க நேர்ந்தது. அவரின் கடைசி கால வாழ்க்கை பற்றி கொஞ்சம் வாசித்து இருந்ததால் மறுபடியும் எழுத நினைத்த்ததை செய்து விடலாம் என்ற எண்ணத்தில் உண்டானது இது. மற்றபடி யாரையும் குறிப்பிடவில்லை இங்கு.

மர்லின் மன்றோ, அழகு பதுமை, செக்ஸ் சிம்பல் என்று பல பல பெயர்கள்.. தனது 36 வயதில் இறந்து விட்டார், அது கொலை இல்லை தற்கொலை இல்லை மாத்திரை மாற்றி போட்டதால் நடந்த விபத்து... என்று எண்ணற்ற கதைகள் கிளைகதைகள்..இவர் தான் குற்றவாளி அவர் தான் குற்றவாளி என்று நிறைய தியரிகள்.இப்படி நிறைய. நான் வாசித்தவரை தொடர்ந்து ஏற்பட்ட மணமுறிவு மற்றும் காதல் தோல்வி மற்றும் வயதானதால் பட வாய்ப்பு குறைந்தது என்று பலவும் அவரின் சாவுக்கு காரணம். இதையெல்லாம் விட எங்கே மறுபடியும் தனிமை ஆகி விடுவோமோ நமகென்று யாரும் இல்லாமல் போய்விடுமோ என்ற ஒரு எண்ணமுமே தான் ஓவர்டோஸ் மருந்து எடுத்து கொண்டதற்கும் பைத்தியம் போலே நடந்து கொண்டதற்கும் காரணம்..

காதல் அதுவும் 30 வயதிற்கு மேலே வரும் காதல், அதுவும் ப்ரெசிடெண்ட் உடன் வந்த காதல் அதன் பின் விளைவுகள்.என்று அடுக்கடுக்கான பிரச்சனைகள் மர்லின் மன்றோவுக்கு.

சொல்ல போனால் நிறைய 30-40 வயதில் இருக்கும் நிறைய பெண்கள் பலருக்கும் இது போன்ற ஒன்று வர ஆரம்பிக்கும். அது பெரிய ஸ்டார் ஆக இருந்தாலும் சரி இல்லை சாதாரண பெண் ஆக இருந்தாலும் சரி.  30 வயதை கடந்த பின்பு ஒரு தனிமை, ஹார்மோன் பிரச்சனைகள் ஒரு காரணமாக இருந்தாலும் முக்கியமாக நாம் முக்கியமானவர்களாக கருதும் சிலர் நம்மை துச்சமாக மதிப்பதாக ஏற்படும் ஒரு எண்ணமும் இதற்க்கு காரணம். மர்லின் மன்றா விசயத்தில் மட்டும் அல்ல, சாதாரண குடும்ப வாழ்க்கையிலும் எப்பொழுது தன்னுடைய கணவர் அல்லது குடும்பத்தார் நம்மை கொடுமை படுத்துகிறார் அல்லது மதிக்காமல் நடக்கிறார் எனில் ஒரு தனிமை வர ஆரம்பிக்கும்.
இந்த நேரத்தில் வெளி உலக தொடர்பு என்று மெதுவாக ஆரம்பிப்பார்கள். இல்லை தன்னுடைய இளமை கால நண்பர்கள் பக்கத்து வீட்டு எதிர் ஆட்கள் என மெதுவாக ஆரம்பிக்கும் நட்பு. இதில் நான் முக்கியமாக குறிப்பிட விரும்புவது நல்லவர்கள் போல நடிக்கும் வல்லூறுகளை பற்றியது. இது ஒரு மிடில் லைப் கிரிசிஸ்.

மெதுவாக இப்படி தனிமையில் அல்லது கஷ்டத்தில் இருக்கும் பெண்கள்டம் நட்பாக பேச ஆரம்பிப்பார்கள். அந்த பெண்ணை தனது வசம் இழுக்க என்ன என்ன வித்தைகள் உண்டோ எல்லாமும் செய்வார்கள். இவர்களின் பேச்சில் மயங்கி தனது வாழ்க்கைக்கு இவர் தான் சரியான துணை என்று முடிவு செய்து வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள் பலரை பற்றி கேள்வி பட்டதுண்டு. அதுவும் பெரிய வளர்ந்த பிள்ளைகளை எல்லாம் விட்டு வந்தவர்களும் உண்டு.

ஆரம்பிக்கும் போது அருமையாக இருக்கும் இந்த வாழ்க்கை ஒரு சில மாதங்களில் கசக்கும் எல்லாம் மோகம் தீர்ந்த பின்பு நடக்கும் ஒரு வேலை. பின்னர் எந்த நரகத்தில் இருந்து தப்பித்தோம் என்று பெண் நினைத்தாளோ அதனை விட கொடிய நரகத்தில் விழுந்து இருப்பாள்.
சொல்ல போனால் இப்பொழுது நேற்று நடப்பது அல்ல இது போன்ற ஒன்று. சுமார் 60
வருடங்களுக்கு முன்பு என் பாட்டி வீட்டில் குடியிருந்த ஒரு அழகான அம்மா இப்படி தன் கணவனை விட்டு ஒரு கூலி  வேலை செய்யும் ஒருவனுடன் ஓடி வந்து அவனோ சபலம் தீர்ந்த பிறகு "என்னோட ஓடி வந்தவ வேற எவன் கூடவாவது போவடி, என்று சொல்லி தினமும் அடிப்பான்" என்று என் அம்மா சில கதைகள் சொன்னதுண்டு.

அதே போல நிறைய கதைகள் கேள்வி பட்டதுண்டு.. எல்லாவற்றின் அடி நாதம் இது தான் தனிமை பெண்களுக்கு வேண்டிய ஒரு செக்யூரிட்டி பீலிங் இதனை பயன்படுத்தி அவளை வஞ்சித்த ஒரு ஆணின் கதை. இந்தயாவில் 99% சதவீதம் இப்படி திருமணதிற்கு வெளியே தொடர்புகள் பிரச்னையில் கொலையில் தற்கொலையில் முடிந்து இருக்கின்றன. அமெரிக்க போன்ற மேற்கத்திய நாடுகளிலாவது  தொடர்புகள் மறுமணத்தில் முடியலாம் ஆனால் இந்தியாவில் இது மிக மிக குறைந்த சதவீதம் மட்டுமே. அதுவும் பெண்ணின் பொருளாதார நிலையை பொறுத்தது. பெண்ணிடம் பணம் இருப்பின் அல்லது நல்ல வேலை இருப்பின் ஒரு வேலை இது மாறலாமே தவிர எல்லா நேரங்களிலும் இது போன்ற தொடர்புகள் ஒரு மாயை மட்டுமே.

நான் இதனை பற்றி எழுதியவுடன் சிலர் ஏமாத்துற பொம்பளைங்களே இல்லையா? என்று கேட்பதுண்டு. இருக்கலாம்.. இருக்கிறார்கள் ஆனால் இந்தியன் செட்டிங் இல் இதனை போன்று இருப்பவர்கள் அதிகம் இருபத்தில்லை

கடந்த சில மாதங்களில் மட்டும் எனக்கு தெரிந்த பெரிய வளர்ந்த குழந்தைகள் கொண்ட மூன்று பெண்கள் வீட்டை விட்டு வந்து இருகிறார்கள். அதுவும் இந்தியாவில் இருந்து வெளி நாட்டுக்கு யாரோ ஒருவரின் பேச்சை. நம்பி வந்தவர்களும் அடங்குவர். எது அவர்களை இப்படி ஆகியது, தற்போது அவர்களின் நிலை என்ன? என்றெல்லாம் யோசித்தால் பாவமாக இருக்கிறது. தேவையா இந்த நிலை, சொந்தமாக சூனியம் வைத்து கொண்ட நிலை இது.  ஒரு குழியில் இருந்து தப்பிப்பதாக நினைத்து புதை குழியுள் விழுந்த நிலை.

பெண்களே, உங்களுக்கு ஒரு சிறு அறிவுரை, திருமணதிற்கு வெளியே தொடர்புகள் எப்பொழுதும் பிரச்சனையில் மட்டுமே முடியும். அவை ஒரு மாயை மட்டுமே.. பருவ இனகவர்சிக்கு ஒப்பானவை அவை. முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய ஒன்று. கொஞ்சம் முற்றி விட்டாலும் உங்கள் வாழ்க்கை குடும்பம் அனைத்தையும் இது சிதைத்து விடும். யாரையும் நம்பாத்தீர்கள் அதுவும் இணைய நட்புகள் வேண்டவே வேண்டாம். உங்களுக்கு குடும்பத்த்தில் பிரச்னை எனில் வெளி ஆள் யாரிடம் பகிர வேண்டாம் . யாரும் மகாத்மா அல்ல. உங்கள் அம்மா, அப்பா அல்லது குடும்பத்தினர் நெருங்கிய தோழிகள் இவர்களை தவிர யாரிடமும் பகிராதீர்கள். வட்டமிடும் வல்லூறுகள் அதிகம் சுற்றும் உலகம் இது.

டிஸ்கி
இது என்னுடைய் அனுபவத்தில் சந்தித்த மனிதர்களை வைத்து எழுதியது மட்டுமே.  யாரையும் குறிப்பிட்டு எழுதியதல்ல.

நன்றி









Monday, December 21, 2015

டெக்னாலஜி அடிக்ட் ஆகும் நாமும் நம் குழந்தைகளும் !

பனிகாலம் முகுந்துக்கு இரண்டு வாரம் பள்ளி விடுமுறை.  விடுமுறைக்கு ப்ளோரிடா பயணம் மேற்கொள்ளலாம், குளிரில் இருந்து ஒரு வாரம் தப்பித்தது போல இருக்கும், புது வேலை என்பதால் புது வருடம் ஆரம்பித்தவுடன் மூச்சு விட நேரம் இருக்காது, எனக்கும் ஒரு பிரேக் என்று முடிவு செய்து கிளம்பியாயிற்று.

ஒர்லாண்டோ, மியாமி என்று லிஸ்ட் நீள, பயண தேவைகள் குறித்த அத்தியாவசிய விஷயங்கள் நான் எடுத்து வைக்க முகுந்தோ  முதலில் எடுத்தது ஐ பெட் , டப்லெட் ... இப்படி கிளம்பும் போது என்ன என்ன தேவை என்ற அத்தியாவசிய விசயங்களில் முக்கியமாக இடம் பிடித்து இருப்பது டெக்னாலஜி கட்ஜெட்ஸ்..

கிளம்பிய நாட்களில் இருந்து காரில் ஏறிய நிமிடத்தில் இருந்து தொடர்ச்சியாக டிவி, டேபிலேட் , போன், ஐபேட் என்று  என்ன என்ன இருக்கிறதோ தொடர்ச்சியாக பார்கிறார்கள். அதிக நேரம் பார்த்தால் தலை வலிக்கும் கண் வலிக்கும் என்று என்ன சொன்னாலும் கேட்பதில்லை. தொடர்ந்து "வாட் கேன் ஐ டூ " பீலிங் போர்ட்" என்று தொடர்த்ந்து அங்கலாய்ப்புகள். நாங்களும் எவ்வளவோ வேறு வேறு விளையாட்டுகள், போர்டு கேம்ஸ், கலரிங், வார்த்தை விளையாட்டுகள், ஹூ ஆம் ஐ? என்று எத்தனை விதமாக விளையாட்டு விளையாடினாலும் அவர்களுக்கு இட்றேஸ்ட் ஏற்படுவதில்லை. சொல்ல போனால் நாம் எங்கே அழைத்தது சென்றாலும் சிறிது நேரம் நம்முடன் வரும் பல குழந்தைகளும் உடனே போனில் வீடியோ கேம் விளையாட கேட்கிறார்கள்.

நான் இந்த விசயத்த்தில் கொஞ்சம் கண்டிப்புடன் ஒரு மணி நேரம் மட்டுமே ஸ்க்ரீன் டைம் என்று வைத்து இருக்கிறேன். மற்ற நாட்களில் என்னதான் நாம் கண்டிப்புடன் இருந்தாலும் இப்படி சுற்றுலா போகும் போதெல்லாம் கண்டிப்புடன் இருக்க முடிவதில்லை. நமக்கும் வேறெதுவும் மாற்று முறை இல்லை என்பதால் நிறைய நேரம் கொடுக்க வேண்டி இருக்கிறது. இப்படி கொடுக்கப்படும் குழந்தைகளிடம் இருந்து நீங்கள் டிவியையோ அல்லது போனையோ வாங்கி பாருங்கள்.. ஒரு சந்திரமுகி படத்தில் வருவது போல பிட் பிடிவாதம்  அடிப்பார்கள்..

சொல்ல போனால் நாமே போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை இருப்பது பரிதாபமாக இருக்கிறது. முன்பெல்லாம் மேப் வைத்து கொண்டு இடத்ததை தேடி செல்ல வேண்டி இருந்தது பின்னர்  டாம் டாம் என்ற ஒன்று வைத்து மேப் பார்த்த காலம் வந்தது.. இப்பொழுதெல்லாம் எல்லாமே போன் தான்.. போனில் அட்ரஸ் போட்டுவிட்டு அது சொல்லுகிற படி தான் எல்லாமே செய்கிறோம். ஆனால் போன் வேலை செய்ய இல்லை என்றால் கதை கந்தல் தான்.  உதாரணமாக வெளியூருக்கு என்று வந்தாகிவிட்டது. முழுதும் நம்பி இருந்தது கூகுளாரை. ஆனால் வரும் வழியில் சார்ஜ் தீர்ந்து விட.. In the middle of nowhere, எங்கே செல்வதென்று தெரியாமல் நல்ல வேலையாக  எப்பொழுதோ வாங்கிய பழைய மேப் ஒன்று பார்த்து வழியை கண்டிபிடித்து வந்து சேர்ந்தோம்.

எல்லாவற்றுக்கும் டெக்னாலஜியை நம்பி இருந்தால் என்னவாகும் என்று நாங்கள் அனுபவித்து உணர்ந்தது. ஆனாலும் எப்படி இதனை தவிற்பது என்று தெரியவில்லை.. சொல்ல போனால் இது அதிகரிக்குமே தவிர குறையாது என்று தோன்றுகிறது..

Sunday, December 13, 2015

எவடே சுப்ரமணியமும் தமிழ் அறிவு ஜீவி பாடக கவிஞர்களும் !

நிறைய நேரங்களில் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ள முயலும் போது நமக்கு எதுவும் புரிவதில்லை. அதே சமயம் சும்மா விளையாட்டாக ஏதாவது ஒரு காரியம் செய்யலாம் என்று செய்ய ஆரம்பிக்கும் போது முகத்தில் ஒரு சில விஷயங்கள் அறையும், அது வாழ்கையின் சில விசயங்களை நமக்கு உணர்த்தி செல்லும்.



வாரம் முழுக்க என்னுடைய IT அறிவையும், புள்ளியியல் அறிவையும் உயிரியியல் அறிவையும் புரட்டி பார்த்து கொண்டு ரெப்ரெஷ் செய்து கொண்டு இருந்த எனக்கு, ஒரு மாற்றத்திற்காக எதோ ஒன்றை பார்க்கலாம் என்று கணினியில் ஒரு பாட்டு ஆன் செய்தேன், அது ஒரு தெலுகு பாட்டு. கேட்கும் போதே, அட இது கேட்ட பாட்டு மாதிரி இருக்கே என்று ஒரே ஆர்வம் அட நம்ம அவதாரம் படத்தில் வரும் "தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ" பாட்டு.

அருமையான அந்த பாட்டின் மெட்டை அப்படியே  தெலுங்கில் கேட்க அமேசிங்..என்ன படம் இது , என்று ஒரு ஆர்வத்தில் கிளிக் செய்தேன். "எவடே சுப்ரமண்யம்"( யாரு சுப்ரமண்யம்?) என்ற தெலுங்கு படம்.  எல்லா தெலுங்கு படங்களும் பாலையா வகையறாக்கள்..கலர் கலர் உடைகள்..பொருந்தாத காட்சிகள் இருக்கும் என்று நினைத்திருந்த எனக்கு ஒரே ஆச்சிர்யம்...என்ன ஒரு படம் இது!!

எது வாழ்க்கை, இதுவே படத்தின் கதை..அதனை கண்டுபிடிக்கும் ஒரு இளைஞனின் கதை இது...IIM இல் MBA முடித்து பணம், புகழ் சம்பாதிப்பதே வாழ்கை என்று அதன் பின்னே போகும் ஒருவன், எதிர்பாராமல் ஏற்கும் ஒரு இமாலயா நோக்கிய ஒரு பயணம் தான் கதை. ஒரு சீன் கூட போர் அடிக்காமல், கண்ணை திருப்பாமல்..என்னை கட்டி போட்ட படம். நான் ஈ படத்தில் நடித்த நானி கதாநாயகன். என்ன ஒரு நடிப்பு. இரண்டாம் பாதி முழுதும் இமாலயா அழகு.  ஒவ்வொரு நிலையிலும் நானியின் மனமாற்றம் எதோ எனக்கே மனமாற்றம் அடைந்தது போல இருந்தது.அப்படி படத்தை வாழ்க்கையோடு ஒன்ற வைத்து விட்டது.

மெட்டீரியலிஸ்டிக் வாழ்க்கை எனப்படும் இன்னும் இன்னும் வேண்டும் என்று அலைந்து திருந்து, பணத்திற்காக புகழுக்காக எதையும்  செய்யும் செய்ய நினைக்கும் ஒருவனின் வளர்சிதை மாற்றம் அழகாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. நாக் அஷ்வின் எனப்படும் ஒரு இளைஞர் அழகாக எடுத்த வாழ்கையை பற்றிய அர்த்தமுள்ள படம் இது. அதில் நடித்த அனைவரும் இளைஞர்கள் அற்புதமான நடிப்பு. ஒரு துளி ஆபாசம் இல்லதா காட்சிகள்..பாடல்கள்..அழகான இசை..என்று எதோ புத்துணர்ச்சி ஏற்பட்டது போல இரு உணர்ச்சி எனக்கு..

ஆர்பாட்டத்திற்கு பேர் போன தெலுகு சினிமாவில் இளைஞர்கள் இப்படி அருமையான வாழ்கை படங்கள் கொடுத்து கொண்டு இருக்க..தமிழ் சினிமாவில் உள்ள  தன்னை தானே அறிவாளி என்று பறைசாற்றி கொண்டு இருக்கும் சில இளைஞர்கள் கீழ்த்தரமான பாடல்களை கொடுத்து அதனை ட்ரேன்டு என்பது எங்கே செல்லுகிறோம் என்று நம்மை கேட்க வைத்து விடுகிறது.

என்னவோ போங்கப்பா!!

Thursday, December 10, 2015

நம்பிக்கை துரோகிகள்!


எல்லா இடங்களிலும் இவர்கள் நிறைந்து இருப்பார்கள். இதில் பலரும் உங்களுடன் நெருங்கி பழகி உங்களை பற்றி நன்கு தெரிந்து இருப்பார்கள். இவர்கள் குடும்பத்தில், நண்பர்கள் வட்டத்தில், வேலையில் என்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருப்பார்கள். சரியான சுயநல வாதிகள் இவர்கள். இவர்களை நம்பி இருப்போம், எல்லாவற்றையும் சொல்லி இருப்போம், இவர்கள் நம்மை கைவிட மாட்டார்கள் என்று மனதார நம்பி இருப்போம். ஆனால் இவர்கள், உங்களை நம்ப வைத்து கழுத்தறுத்து இருப்பார்கள். உங்களிடம் நல்லவர் போல நடித்து உங்களை பற்றி பின்னால் பேசி, கிண்டல் அடித்து இருப்பார்கள் அல்லது நீங்கள் பூரணமாக நம்பி இருந்தவர் உங்களை நற்றாற்றில் விட்டு விட்டு தன் சுயநலத்திற்க்காக சென்று இருப்பார். அதில் ஒரு சந்தோசம் அவர்களுக்கு.

நிறைய நம்பிக்கை துரோகிகளை நான் கண்டு இருக்கின்றேன் என்றாலும், சமீபத்தில் ஒருவரை காண நேர்ந்தது. என்னுடைய mentor என்று நான் நினைத்த ஒருவர் நன்றாக என்னை முதுகில் குத்தி விட்டு சென்றதால் வேலை மாற்றம் நேரப்போகிறது. இனிமேல் பதிவு எழுத நேரம் கிடைக்காது என்பது திண்ணம். அதனால் சிறிது காலம் பதிவிற்கு ஓய்வு கொடுத்து விட்டு, வேலையை கவனிக்க போகிறேன்.

இந்த வருடம் என்னுடைய பதிவுலக வாழ்கையை பொருத்தவரை மிக நல்ல ஒன்று, பதிவு ஆரம்பித்ததில் இருந்து நான்கு வருடங்களில் நான் எழுதிய மொத்த பதிவுகளை விடவும் இந்த வருடம் நிறைய எழுதி இருக்கிறேன். நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருந்து இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் புது வருட வாழ்த்துக்கள்.

நன்றி.


Monday, December 7, 2015

பொறமை: புல்லியிங்/ராகிங் முதல் இதிகாசங்கள் வரை

என்னுடன் வேலை பார்க்கும் வெள்ளை அமெரிக்கர் ஒருவர் தன்னுடைய 10 வயது மகன் பள்ளியில் தான் பெரியவனாக, உயரமானவனாக இருப்பதால்  ராகிங்  செய்யபடுவதாக குறிப்பிட்டார். அதனால் அந்த சிறுவன் தன்னுடைய பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை என்று தெரிவித்ததாகவும் சொன்னார், இதனை கேட்ட இன்னொரு என்னுடன் வேலை பார்க்கும் ஆசியர் ஒருவர், "தன்னுடைய பையன் உயரம் குறைந்தவானாக இருப்பதால்" எப்போதும் புல்லி செய்ய படுவதாக கூறினார். ஒரு கேசில் உயரம் அதிகம் ஆனாதால் ராகிங் இன்னொரு கேசில் குள்ளமானதால் ராகிங்.இதனை குறித்து பேசிக்கொண்டு இருந்த போது,  என்னுடன் வேலை பார்க்கும் இன்னொரு அரபு நாட்டை சேர்ந்த, இங்கு சிறு வயதில் வந்து செட்டில் ஆன ஒருவர், "ராகிங் செய்பவர்களுக்கு அடிப்படை பொறமை, உங்கள் மேல் ஏதேனும் ஒரு வகையில் தான் பெரிய ஆள் என்று காட்ட வேண்டும் அனைவரை விடவும் தான் அதிகாரம் மிகுந்தவன்/ மிகுந்தவள் என்று காட்ட வேண்டும் என்ற காரணத்தாலேயே இப்படி   செய்கிறார்கள். நீங்கள் பெர்பெக்ட் ஆகவே இருப்பவர் ஆயினும், ஏதேனும் ஒன்றை கண்டுபிடித்து உங்களை புல்லி செய்வார்கள். குழந்தைகள் இதனை எப்படியாவது சமாளிக்க கற்று கொள்ளுவார்கள், "Dont worry". என்று சொல்லி கொண்டு இருந்தார்.


இதனை கேட்டபின்னர் எனக்கு தோன்றிய சில எண்ணங்கள் இங்கே  பொறமை என்பது என்ன?, அடுத்தவர் சந்தோசமாக/அழகாக/அறிவாக/பணக்காரராக இப்படி எதோ ஒன்று அல்லது பல வைத்திருப்பது கொண்டு அவர் மேலே கோவம்/ஆத்திரம்/ இப்படி கொண்டு அவரை மறைமுகமாகவோ நேராகவோ தாக்குவது.

"பொறமை என்பது  ஒரு வகை மனநோய்",  என்று சொல்லி சிலர் சென்று விடுவார்கள்.ஆனால், இது கிட்டத்தட்ட எல்லாருக்குள்ளும் இருக்கும் ஒரு குணம். என்னிடம் பொறாமையே இல்லை என்று ஒருவன் சொல்வார் என்றால் அவர் முற்றும் துறந்தவர் அல்லது பைத்தியம். ஏனெனில் குழந்தைகள் கூட அவனிடம் அந்த பொம்மை இருக்கிறது என்னிடம் இல்லை, என்று சொல்வதுண்டு.

பொறமை என்ற ஒரு குணம் தான் பல பல தமிழ் சீரியல்களில் அன்றாடம் காட்டபடுகிறது. பொறமை என்ற ஒரு உணர்ச்சியை மைய படுத்தியே கணக்கில்லா விளம்பரங்கள். அவ வீட்டுல அது இருக்கு எனக்கும் வேணும். அவ டிரஸ் வெள்ளை எனக்கும் வேணும். நீ இங்க வீடு வாங்கி இருக்கியா நான் அங்க வீடு வாங்கி இருக்கேன் பாரு என்று பல பல தினுசாக பொறாமையை மையபடுத்தி
பாத்ரூம் கிளீனர் இல் இருந்து வாஷின்மசின் கார் அல்லது வீடு  வாங்குவது வரை விளம்பரங்கள் தினமும் டிவி யில் ஒளிபரப்ப படுகின்றன.

சிறு வயதில் இருந்தே, பொறமை என்பது நல்ல குணம் என்பது போல நமக்கு மறைமுகமாக புகட்ட படுகிறது. அடுத்த வீட்டு பொண்ணு/பைய்யன் எப்படி படிக்கிறான் பாரு நீயும் தான் படிக்கிறியே..என்று அடுத்த வீட்டு பையனை/பொண்ணை உதாரணம் காட்டி அவர் மீது பொறமை தீ கொழுந்து விட்டு எரிய செய்வதில் நிறைய பெற்றோருக்கு பங்கு உண்டு. அது ஆரோக்கியமான போட்டிக்கு உதவும், பல நேரங்களில் காரணம் சொல்லபட்டாலும், உண்மையில் தன்னிடம் இருக்கும் நல்ல விஷயத்தை அறிவை நம் பெற்றோர் பாராட்டவில்லையே என்று தன் மீதே நிறைய "காம்ப்ளெக்ஸ்" வரும் நிலையை நிறைய குழந்தைகள் அடைகிறார்கள். எப்படி படிப்படியாக காம்ப்ளெக்ஸ் அடைந்த குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் போது நிறைய "காம்ப்ளெக்ஸ்" நிறைய போட்டி எதற்கெடுத்தாலும் போட்டி, யாருடனும் போட்டி. என்று போட்டி மேல் போட்டி போடும் நிலை. இதில் ஒரு கட்டத்தில் தன்னை சுற்றி எல்லாருமே போட்டியாளர்கள் என்ற ஒரு மனநிலை வந்து விடுகிறது. "Competitiveness is good" என்று பலரும் போதிக்கிறார்கள். உண்மையில் பொறமை/போட்டி தேவையா?

தமிழில் பொறமை , அழுக்காறு என்று குறிக்கபடுவது போல என்பது ஆங்கிலத்தில் இரண்டு சொற்களால் குறிக்க படுகிறது. Jealousy and Envy.

Jealousy என்பது எங்கே தன்னிடம் இருக்கும் ஒன்று தன்னை விட்டு சென்று விடுமோ என்ற பயத்தில் அடுத்தவர் மீது கொள்ளும் பொறமை. இதற்க்கு உதாரணமாக பல சந்தேகப்படும் கணவன் அல்லது மனைவிகளை சொல்லலாம்.  எங்கே தன்னுடைய கணவன் அல்லது மனைவி தன்னை அழகில்லை/காசில்லை/அறிவில்லை  என்று சொல்லிவிட்டு பிறரிடம் சென்று விடுவாரோ என்று பயந்து, கணவன்/மனைவி யாரிடம் பேசினாலும் அவர்கள் இடத்தில் பொறமை கொள்ளுவது, அவர்களை தூற்றுவது. இது ஒரு போச்செச்சிவ் நிலை.

மற்றொன்று, envy. இது தன்னிடம் இல்லாததை அடுத்தவர்கள் வைத்திருந்தால் அதற்காக அவர்கள் மீது பொறமைபடுவது. அல்லது தன்னிடம் இருக்கும் எதனையும் சந்தோசமாக அனுபவிக்காமல் இன்னும் இன்னும் என்று எதனையோ தேடி கொண்டே இருப்பது.


சொல்லபோனால், பொறமை இல்லையேல் நமக்கு பல இதிகாசங்கள் ,கதைகள்  கிடைத்து இருக்காது. கிட்டத்தட்ட எல்லா கதைகள் மற்றும் இதிகாசங்களில்  அடிநாதம் "பொறமை" தான். ராமாயணத்தில் "சூர்பனகை கொண்ட பொறமை, மகாபாரதத்தில் "துரியோதனன் கொண்ட பொறமை. ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ வில்  அடிநாதமே தன் மனைவியின் அழகு மீது பொறமை பயம் கொண்ட ஒதெல்லோ. Lolita வில் ஹம்பேர்ட் இன் பொறமை, "The Great Gatsby", "Ulysses" என்று சொல்லி கொண்டே போகலாம்.

பதிவின் முதலில் குறிப்பிட்டது போல, நிறைய பள்ளிகளில் தற்போது நடக்கும் புல்லியிங் இன் அடிப்படை என்னவென்று பார்த்தால் ஒன்று அந்த பெண் அழகானவராக இருக்க வேண்டும் அல்லது அந்த பையன் அறிவாளியாக இருக்கவேண்டும். அல்லது தான் பெஸ்ட், என்று உலகிற்கு காட்ட நிரூபிக்க என்று புல்லி செய்கிறார்கள். பொறமை உணர்வில் ஆரம்பிக்கும் சில நேரங்களில் வெறியாகி குழப்பத்தை, சில நேரங்களில் மரணத்தை கூட கொண்டு வந்து விடும். அதே trait பள்ளி, கல்லூரி, வாழ்க்கை என்று தொடர்ந்து எப்போதும் எல்லாரையும் போட்டியாக, பொறமை படுவது. எப்பொழுதும் தன்னிடம் இருப்பது பத்தாது இன்னும் இன்னும் வேணும் என்று ஏங்குவது அதற்காக எல்லாவற்றையும் செய்ய தயாராக இருப்பது. என்று முடிவில்லாமல் போய் கொண்டு இருக்கும், வாழ்கையில் சந்தோசம் என்பது துளியும் இருக்காது.

முடிவாக, உங்கள் குழந்தைகளுக்கு பொறாமையை கற்று கொடுக்காதீர்கள், அதற்க்கு பதில் அவர்களின் திறமையை வளர்க்க பாசிடிவ் ஆக கற்றுகொடுங்கள். அதே போல அடுத்தவர் தங்கள் மீது பொறமை கொண்டு தங்களை துன்புறுத்தினால்  அதனை எப்படி சமாளிப்பது என்று கற்று கொடுங்கள். அதுவே சரியான வாழ்க்கை பாடமும் ஆகும்.

நன்றி



Saturday, December 5, 2015

சென்னை வெள்ளத்திற்கு பிறகு வரும் சுகாதார பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி?

வெள்ளம் வடிய தொடங்கி விட்டது. வெள்ளத்திற்காக வேறு வீடுகளுக்கு சென்றவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு சென்றவர்களும் மெதுவாக தங்கள் வீடுகளுக்கு செல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். தற்போது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பது பெரிய விஷயம். நிறைய நீர் கழிவு நீருடன் கலந்து வீடு வாசல் முழுதும் வந்து இருக்கும். நல்ல பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் இருக்கலாம். இதனால் நீரின் மூலம் பரவும் பல தொற்று வியாதிகள் பரவலாம். அதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக செய்ய வேண்டிய சில விஷயங்கள் CDC  ஆல் குறிப்பிடப்படும் சில இங்கே. 
  1. வெள்ள நீரில் கலந்த எந்த உணவு அல்லது நீர் அருந்தினாலும் டையரியா அல்லது வயிற்றுபோக்கு உண்டாகலாம். அதனால் அப்படிப்பட்ட உணவு மற்றும் நீர் அருந்துவதை தவிர்ப்பது நல்லது. வெள்ள நீரில் கிடந்த எந்த பொம்மை மற்றும் விளையாட்டு பொருட்களுடன் குழந்தைகளை விளையாட விட வேண்டாம்.
  2. பாதுகாப்பான குடிநீருக்கு மழை நீர் சேகரிக்க முடிந்தால் அதனை உபயோகியுங்கள். எந்த குடிநீர் எனினும் கொதிக்க வைத்து குடிக்கவும். காஸ், எலெக்ட்ரிசிட்டி இல்லாத பட்சத்தில் ஒரு சுத்தமான சேலை அல்லது வேட்டியை நான்காக மடித்து அதில் நீரை நன்கு வடிகட்டி குடிக்கலாம். இப்படி செய்வதால் குறைந்தபட்சம் 50% காலரா பரப்பும் கிருமிகளில் இருந்து தப்பிக்கலாம் என்று ஆராய்ச்சி மூலம் அறிய முடிகிறது(1)
  3. மருந்துக்கடைகளில் கிடைக்கும் ORS எனப்படும் Oral dehydration solution அல்லது பவுடர் வாங்கி வைத்து கொள்ளவும். இது வயிற்றுபோக்கு வந்தால் தண்ணீரில் கலந்து குடிக்கவும். இது உடலில் nutrients குறையாமல் பார்த்து கொள்ளும். குறைந்தபட்சம் குழந்தைகளுக்கு இதனை கொடுக்கலாம். அதே போல antiemetic மருந்துகளும் முடிந்தால் வாங்கி வைத்து கொள்ளவும். இது வாந்தி வருவதை கட்டு படுத்தும்.
  4. வீட்டை சுற்றி அதிக நேரம் வெள்ள நீர் தேங்கி இருப்பின் அதில் நிற்பதை தவிர்க்கவும். இது Leptospirosis வருவதை தவிர்க்கும்.
  5. சாப்பாடு கிடைக்கவில்லை எனில், குறைந்த பட்சம் தண்ணீரில் சக்கரையும் உப்பையும் கலந்து குடிக்கவும். இது உடலில் நீர்சத்து குறையாமல் வைத்திருக்க  உதவும்.
  6. வெள்ளம் வடிந்து வீடிற்கு திரும்பிய உடன் எந்த எலெக்ட்ரிக் உபகரணங்களையும் உபயோகிக்க வேண்டாம். ஈரம் இருக்கும், அதனால் நன்கு காய்ந்தவுடன் உபயோகிக்கலாம். அதே போல நிறைய வீட்டில் நாம் உபயோகிக்கும் கெமிகல் எல்லா இடங்களிலும் இருக்கலாம். உதாரணமாக டாய்லெட் கிளீனர். இவைகளை முகத்தில் துணி கட்டி கொண்டு பாதுகாப்பாக அப்புறபடுத்திய பிறகு வீட்டை சுத்தமாக சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு சுத்தமாக்கிய பிறகு உபயோகிக்கவும்.
  7. முடிந்தால்   ஒருபக்கெட் தண்ணீரில் 1 கப் ப்ளீச் போட்டு வீட்டின் சுவர் முதல் தரை வரை துடைத்து விடவும்.
  8. வீட்டுக்குள் நுழையும் பொது எந்த அரிகேன் விளக்கு உபயோக்கிகவும். மெழுகுவத்தி டார்ச் போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம். ஏனெலில், ஒரு சில நேரங்களில் காஸ் லீக் ஏற்பட்டு இருப்பின் அதனை தடுக்க உதவும். இது கார் பேட்டரிக்கும் பொருந்தும்.  

References  

1. Reduction of cholera in Bangladeshi villages by simple filtration (http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC298724/)

2. http://emergency.cdc.gov/disasters/floods/cleanupwater.asp

Friday, December 4, 2015

சென்னை வெள்ளம் குறித்து பரவும் செய்திகள், எது உண்மை? எது புரளி?

இது தற்போது வெளிநாட்டில் வசிக்கும், ஆனால் இந்தியாவில் சென்னையில் சொந்தங்கள் இருக்கும் ஒருவரின் மன நிலையில் இருந்து எழுதியது.

ஏன் இப்படி மக்களே? இப்படி தான் எனக்கு கேட்க தோன்றுகிறது.

 "சென்னை வெள்ள காடானது, எங்கும் எதிலும் வெள்ளம்". என்ற செய்தி FB, Whatsapp போன்றவற்றில் பரவ ஆரம்பித்ததும் , தன் குடும்பத்தை அல்லது தாய் தந்தையரை சென்னையில் விட்டு  விட்டு வெளிநாட்டில் எங்கோ இருக்கும் எங்களை போன்ற பலர் பட்ட பாடு பரிதாபமானது.
எப்படி இருக்கிறார்களோ நம் சொந்தங்கள், எங்காவது ஒதுங்கினார்களா? சாப்பாடு குடிநீர் கிடைத்ததா?, குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?, எதுவும் ஆபத்தா? என்று கேள்வி மேல் கேள்வி தொக்கி நிற்க, போன் போகாவிட்டாலும் தொடர்ந்து போன் அடித்தும், இணையம், FB, Whatsapp போன்றவற்றை நொடிகொரு தரம் செக் செய்து கொண்டு இருந்த தருணங்கள் மறக்க முடியாதவை. கடைசியில் சொந்தங்கள்  "ஸேப்" ஆக இருக்கிறார்கள் என்ற அவர்களின் குரல் கேட்கும் வரை இருந்த பதை பதைப்பு வார்த்தைகளில் விவரிக்க இயலாது.

இந்த நிலையில் வாட்ஸ் அப்  மற்றும் FB இல் அல்லது இணையத்தில் "சென்னை வெள்ளம்" என்ற தலைப்பில் பல பல fake படங்கள், செய்திகள் மற்றும் வீடியோக்கள். நிறைய போட்டோ ஷாப் வேலைகள் நடந்து எடுக்கப்பட்ட விஷயங்கள்.

உதாரணமாக, சென்னை ஏர்போர்ட் வெள்ளத்தில் மூழ்கி விட்டது என்று ஒரு போட்டோ வைரல் ஆக பரவி கொண்டு இருக்கிறது.

அது கடந்த வருடம் சிகாகோ ஏர்போர்ட்இல் நடந்த வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டது. ஏனெனில் United, இந்தியாவிற்கு டைரக்ட் ஆக பறப்பதில்லை.




அதே போல ஒரு லாரி திருப்பதி அருகே குடை சாய்வது போல ஒரு வீடியோ , அது தான்சானியா நாட்டில் பிப் 2014 இல் எடுக்கப்பட்டது.


மற்றும் ஒரு வீட்டில் வெள்ளம் புகுந்து அனைவரும் மீக்கபடும் வீடியோ என்று வித விதமாக போட்டோ...பல போட்டோ மற்றும் வீடியோக்கள் அனைத்தும்  புரளி .


ஏற்கனவே உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கும் மக்கள் பயந்து கொண்டு இருக்க? ஏன் இப்படி புரளி கிளப்புகிறார்கள். இதில் என்ன கிடைக்க போகிறது. இதில் செய்தி ஊடகங்கள் வேறு, முக்கியமாக எதிர் கட்சி சேனல்ஸ், உண்மையை திரித்து பேசுவது, செய்தி வாசிப்பது, என்று இன்னும் பயத்தை அதிகரித்து கொண்டு இருந்தனர்.ஏற்கனவே பயத்தில் இருக்கும் மக்கள் இப்படிப்பட்ட புரளி வீடியோ, செய்திகள் என்று பார்க்கும் போது இன்னும் பயந்து சாக மாட்டார்களா? ஏன் இப்படி மக்களே?

என்னவோ போங்கப்பா!

டிஸ்கி 

முதலிலேயே சொன்னது போல, இது வெளிநாட்டில் வசிக்கும் சென்னையில் குடும்பம் இருக்கும் ஒரு சராசரி மனிதனின் மன நிலையில் இருந்து எழுதியது மட்டுமே. யாரையும் குறிப்பிட்டு எழுதவில்லை சொல்லவில்லை.

Thursday, December 3, 2015

பெண்கள், வெஸ்டேர்ன் உடைகளை உடுத்தும் போது கவனிக்க வேண்டியது

தற்போது வெஸ்டேர்ன் உடைகளை உடுத்துவது என்பது சென்னை, மும்பை போன்ற மெட்ரோ நகர பெண்கள் மட்டும் இல்லாமல், மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் வசிக்கும் பெண்களும் தற்போது ஜீன்ஸ், டீ ஷர்ட் போன்றவை உடுத்துகின்றனர். பெரும்பாலும் நிறைய பெண்கள் குர்தா அணிந்து கொண்டு அதற்க்கு ஜீன்ஸ் உடுத்துவதை பார்த்து இருக்கிறேன். கல்லூரி செல்லும் பெண்கள் மட்டும் என்று இல்லை பலநடுத்தர வயது பெண்களும் தற்போது வெஸ்டேர்ன் உடைகளை உடுத்துவதை பார்க்கிறேன்.

ஆனால், பெரும்பாலும் இந்திய பெண்களுக்கு அதுவும் தென்னிந்திய பெண்களுக்கு வெஸ்டேர்ன் உடைகள் உடுத்துவது எப்படி என்று தெரியவில்லையோ என்று தோன்றுகிறது. அது இந்தியாவில் இருக்கும் வெஸ்டேர்ன் உடைகளை உடுத்தும் பெண்களாயினும் அல்லது இங்கே வந்த பெண்களாயினும் சரி.

உதாரணமாக ப்ளாக் ஃப்ரைடே ஷாப்பிங் சென்ற போது, இரண்டு நடுத்தர வயது பெண்கள் வந்திருந்தனர். குளிருக்கு என்று  இருவரும் ஜீன்ஸ் போட்டு ஒரு டைட் ஸ்வெட்டர் போட்டு இருந்தனர். வயிற்று பகுதியில் பிதுங்கி அசிங்கமாக இருந்தது. இத்தனைக்கும் அவர்கள் குண்டானவர்கள் கூட இல்லை. கரெக்ட் பிட்டிங் ஜீன்ஸ் அணிந்திருந்தால் இப்படி அசிங்கமான தோற்றத்தை தவிர்க்கலாம்.

இன்னொரு உதாரணமாக என்னுடன் வேலை பார்க்கும் வெள்ளைகார பெண்மணி ஒருவர்,  ஆனால் அவர் உடுத்தும் உடைகளில் இருந்து அவரை பார்த்தால் உடல் பருமனானவர் என்று உங்களால் கணிக்கவே முடியாது. அப்படி ஒரு எலிகெண்ட் டிரெஸ்ஸிங் சென்ஸ் அவருக்கு.

 நீங்கள் கொஞ்சம் உடல் பருமனானவர் அல்லது குழந்தை பிறந்த பிறகு  தொப்பை போட்டு இருக்கிறது என்றால் எப்படி உடைகளை தெரிந்தெடுப்பது என்பது குறித்த சில டிப்ஸ் இங்கே.


  • ஸ்கின்னி ஜீன்ஸ் அறவே வாங்காதீர்கள். அதற்காக உங்கள் கணவரின் பழைய ஜீன்ஸ் பெரிதாக சரியாக இருக்கும் என்று அதனையும் போட்டு கொள்ளாதீர்கள். எப்பொழுதும் உங்கள் சைஸ்க்கு சரியாக இருக்கும் உடைகளை மட்டுமே வாங்குங்கள். ஸ்கின்னி ஜீன்ஸ் நோ நோ.
  • கிராப் பாண்ட்ஸ் எனப்படும் கனுக்காலுக்கு வரைக்கும் இருக்கும் பாண்ட்ஸ் வாங்கவே வாங்காதீர்கள், இப்படிபட்ட பாண்ட்ஸ் ஒல்லியாக இருப்பவர்களுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும், ஆனால் கொஞ்சம் உடம்பு  கொண்டவர்களுக்கும் இது பொருந்தாது, முக்கியமாக உங்கள் தொடை பகுதிகளை பெரிதாக காட்டும் என்பதால் இப்படிப்பட்ட பாண்ட்களை வாங்காதீர்கள்.

  •  குளிருக்கு puffy வைத்தது போல இருக்கும் ஜாக்கெட்களை வாங்காதீர்கள், இவை உங்களுக்கு பல்கி தோற்றத்தை தரும். ஒல்லியாக சிக் என்று இருப்பவர்களுக்காகவே இவை பொருந்தும்




  • பெரிய டிரஸ்களை வாங்காதீர்கள். ஆபீஸ்க்கு நிறைய பெண்கள் டிரஸ் எனப்படும் மிடி போன்ற ஒன் பீஸ் டிரஸ்களை அணிந்து வருவார்கள். அதனை பார்த்து சிலர், நானும் வாங்குகிறேர் என்று, சென்று வாங்குவார்கள். ஆனால் உடலில் இருக்கும் தொப்பை அல்லது சதை நிறைந்த பாகங்கள் அதிகம் வெளியே தெரிய கூடாது என்று உடலை மறைக்கும் பெரிய சைஸ் டிரஸ் வாங்குவார்கள். அது போட்டால் கிறிஸ்துவ நன் போன்ற ஒரு தோற்றம் வரும் என்பதை அவர்கள் உணருவதில்லை 

  • தவறான சைஸ் இல் உள்ளாடைகள் அணிவது. சாரி லேடீஸ், இதனை சொல்லியே ஆக வேண்டும். நன்கு உடை உடுத்துவதற்கு அதனை வாங்குவதற்கு முன்பு, சரியான சைஸ் உள்ளாடைகள் மிக மிக அவசியம். உங்கள் உள்ளாடைகள் வேறு சைஸ்இல் இருந்து அதற்க்கு மேலே நீங்கள் எந்த அழகான ஆடை அணிந்தாலும் அது அசிங்கமான தோற்றத்தை மட்டுமே தரும்.
  • நிறைய பிரிண்ட் போட்ட பாண்டுகள் வாங்குவது. நிறைய பேர் மாடல்கள் போட்டிருக்கும் பிரிட்டி பாண்டுகள் பார்த்து, நமக்கும் பொருந்தும் என்று பிரிண்டட் பாண்டுகள் வாங்குகிறார்கள். ஆனால், அது உங்களை பெரிதாக இடுப்புக்கு கீழே காட்டும் என்று உணருவதில்லை. 
  • உங்கள் மார்பு சுற்றளவு அதிகம் கொண்டவர் எனில் எப்பொழுதும் குறுக்கே கோடுகள் போட்ட, சட்டை ஸ்வெட்டர் வாங்கவே வாங்காதீர். அது உங்கள் மார்பளவை இன்னும் அதிகமாக கூட்டி காட்டும். என்னை பொருத்தவரை, ஒல்லியானவர்கள் குண்டாக காட்ட என்று மட்டுமே இந்த குறுக்கு கோடுகள் பயன்படும் அதனால் பெரிய நோ நோ.

  • முடிவாக, லேயர், லேயர் ஆக உடை உடுத்துவது நல்லது. குளிர்க்கும் சரியாக இருக்கும் ஸ்டைல் தோற்றத்தையும் தரும். உதாரணமாக, கார்டிகன் எனப்படும் மெல்லிய ஸ்வெட்டர் வங்கி கொள்ளுங்கள், எந்த சட்டை அல்லது மேலாடை போட்டாலும்  அதற்க்கு மேலே கார்டிகன் போட்டு கொள்ளுங்கள். அல்லது நல்ல பெல்ட் உடை மேலே அணிந்து கொள்ளுங்கள். அதனுடன் நல்ல ஸ்கார்ப் போட்டு கொள்ளுங்கள். நீங்கள் குண்டாகவே இருந்தாலும் கார்டிகன் உங்களின் உடல் சதைகளை மூடி மறைத்து விடும். ஸ்கார்ப் மற்றும் பெல்ட் உங்கள் மீது விழும் பார்வையை டிஸ்டரஆக்ட் செய்து நீங்கள் குண்டான தோற்றத்தை கொண்டவர் என்பதை மறைத்து விடும்.


யாராயினும், எந்த சைஸ் கொண்டவராயினும் வெஸ்டேர்ன் உடை உடுத்தலாம். முயற்சி செய்து பாருங்கள்.

நன்றி.

டிஸ்கி 
இது என்னுடைய அனுபவத்தில் நான் கண்டதை வைத்து எழுதியது மட்டுமே..பேஷன் அட்வைஸ் அல்ல.


Thanks to google images for photos


Sunday, November 29, 2015

இந்தியர்களும், ஒற்றுமையும், சங்கங்களும்!

எப்பொழுதெல்லாம் என்னுடைய தோழிகளுடன் "இந்தியா பற்றி" நான் பேசும் போது அல்லது விவாதிக்கும் போது, ஒரு விஷயம் அவர்கள் 'பெருமையாக' சொல்வதுண்டு. அது,  இந்தியாவில் தான் இந்தியர்களிடத்தில் தான்  "unity in diversity" உண்டு வேறு எந்த நாட்டிலும் இல்லை என்று.

சமீப காலமாக ஒரு செய்தி முகநூலில் சுத்தி கொண்டு இருப்பதை பார்த்தேன்,
 "தெருவை தாண்டினேன், என்னுடைய சாதி கேட்டார்,
டிஸ்ட்ரிக்ட் தாண்டினேன் என்னுடைய ஊர் மற்றும் மதம் கேட்டார்,
மாநிலத்தை தாண்டினேன் என்னுடைய தாய்மொழி கேட்டார்
நாட்டை தாண்டிய பின் தான் இந்தியன் ஆனேன்"

அட, என்ன கவி நயம் என்று ஆச்சரியமாக இருந்தது.ஆனால் இவர்கள் சொன்னது போல இது உண்மையா. நாட்டை தாண்டியவுடன் நாமெல்லாம் இந்தியர் ஆகிவிட்டோமா? என்று எனக்குள் சில கேள்விகள்.

கடந்த சில வாரங்களில் பார்த்த கேட்ட சில விசயங்களும் இந்த கேள்வியை பல முறை என்னுள் கேட்க தூண்டியது.

உதாரணமாக  எங்கே இந்தியர்கள் இடம் பெயர்ந்தாலும் ஏதேனும் ஒரு சங்கம் உருவாக்கி விடுவார்கள். நான் படித்து கொண்டு இருந்தவரை, அது இந்திய மாணவர்கள் சங்கம் என்ற ஒன்றாக இருந்து இருக்கிறது. அதன் பின்னர் எனக்கு தெரிந்து ஒரு சங்கமும் "இந்திய சங்கம்" என்று பார்க்கவில்லை அல்லது எனக்கு தெரியவில்லை.  உதாரணமாக, "தெலுகு சங்கம்" ஊருக்கு ஊர் உண்டு. அதே போல "தமிழ் சங்கங்களும்" உண்டு. மராட்டி சங்கம், குஜராத்தி சங்கம், மலையாளிகள் சங்கம், கன்னடிகர் சங்கம் ....என்று பல சங்கங்கள் பார்த்ததுண்டு.

இதில் ஜோக் என்னவென்றால் அந்த சங்கத்தில் நீங்கள் உறுப்பினர் ஆக வேண்டும் என்றால் இந்தியர் ஆக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை ஆனால் அந்த "மொழி" பேசுபவர் ஆக இருத்தல் அவசியம்.

இது கூட பரவாயில்லை என்று நான் நினைப்பது உண்டு, மொழிவாரி பிரிவு தானே பிரித்து இருக்கிறார்கள் போனால் போகுது என்று.. ஆனால் கடந்த வாரம் தேங்க்ஸ் கிவிங் பண்டிகையின் போது ஒரு தெலுகு குடும்பம் சாப்பிட அழைத்து இருந்தோம். அவர்கள் சொன்னது எனக்கு தலை சுற்றியது.

அதாவது இப்படி ஆரம்பிக்கப்படும் சங்கங்களுக்குள் நடக்கும் பாலிடிக்ஸ் இந்திய உலக பாலிடிக்ஸ் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விடும், அதனாலேயே தெலுகு சங்கங்கள் மட்டுமே தற்போது மூன்று இருக்கின்றன என்றார். அதை விட உச்சம் என்னவென்றால் தற்போது, "சாதி சங்கம் ஒன்று" வைசிய மக்கள் சங்கம் " ஒன்று ஆரம்பிக்க பட்டு இருப்பதாக கூறினார். அடபாவிங்களா, எங்க போனாலும் உங்க நிறம், குணம் மாறாதா? என்று வருத்தப்பட வைத்தது.

எந்த மொழி சங்கமாயினும் சரி, உள்ளே பாலிடிக்ஸ் நாறுகிறது, நீ பெரியவனா, நான் பெரியவானா, எனக்கு எவ்வளோ சப்போர்ட் இருக்கு பார், உனக்கு இருக்கிறத விட..என்று ஏனப்பா இந்த பாலிடிக்ஸ். என்னிடம் எவ்வளவு பணம் இருக்குது பார், நான் எவ்வளவு பெரியவேலையில்  இருக்கிறேன் பார்...என்று போட்டி, பொறாமை,....இது தான் நடக்கிறது.

இந்த நிலை சங்கங்களில் மட்டும் என்று இல்லை ஒரு பார்ட்டி , கெட் டுகெதர் என்று சென்றாலும், இதே நிலை..பாலிடிக்ஸ்..என்று மனது தாங்க முடியவில்லை.

இப்போது மறுபடியும், முகநூலில் சுற்றி கொண்டு இருக்கும் விசயத்ரிக்கு வருவோம்.

 "தெருவை தாண்டினேன், என்னுடைய சாதி கேட்டார்,
டிஸ்ட்ரிக்ட் தாண்டினேன் என்னுடைய ஊர் மற்றும் மதம் கேட்டார்,
மாநிலத்தை தாண்டினேன் என்னுடைய தாய்மொழி கேட்டார்
நாட்டை தாண்டிய பின் தான் இந்தியன் ஆனேன், கனவில் மட்டும்"

நன்றி.



டிஸ்கி
இது சங்கங்கள் குறித்து என்னுடைய எண்ணங்கள் மட்டுமே, யாரையும் குறிப்பிடவில்லை.




Thursday, November 26, 2015

தொலைத்த ஐடெண்டிடியும்?, குட்டி சுவர் பசங்களும்!


Images from google images

முதல் விஷயம், சில நாட்களுக்கு முன் "எது எனது அடையாளம்?" என்ற  ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது, (யாருடைய தளத்தில் என்பது மறந்து விட்டது,மன்னிக்கவும், யாராவது சொன்னால் சேர்த்துக்கொள்ள உபயோகமாக இருக்கும்), அதில் அவர் சொன்ன சில விஷயங்கள் குறித்து நானே நிறைய யோசித்து இருக்கிறேன். தற்போது கடந்த வாரம் நடந்த ஒரு நிகழ்ச்சியும் என்னை இந்த கேள்வியை குறித்து சிந்திக்க தோன்றியது.

நான் வேலை செய்யும் ஆபிசில் நிறைய இந்தியர்கள் வேலை செய்கிறார்கள். அதில் நிறைய பேர் ஆப் சைட் க்கு இன்போசிஸ், TCS, CTS ...போன்ற பல கம்பனிகளில் இருந்து வந்தவர்கள். அதனை தவிர இங்கேயே சில ஆண்டுக்கு முன்பு வந்து செட்டில் ஆனவர்களும் இருக்கிறார்கள்.

என்னுடன் வேலை பார்க்கும் ஒரு குஜராத்தி தற்போது இரண்டாம் தலைமுறை குஜராத்தி. லண்டனில் பிறந்து வளர்ந்த இவர் இங்கே சிறு வயதில் வந்து விட்டார், இருப்பினும் நல்ல குஜராத்தி பேசுவதாக சக குஜராத்தி மக்கள் சொல்லுகிறார்கள். தான் பிறந்து வளர்ந்தது எல்லாமே UK என்றாலும் தன்னை ஒரு குஜராத்தி என்று சொல்லி கொள்ளுவதில் ஒரு பெருமை அவருக்கு.

இன்னொரு பெண் இருக்கிறார், தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆனால் பம்பாயில் சென்று சிறு வயதில் செட்டில் ஆனவர். முதலில் நான் அவரை சந்தித்த போது நீங்களும் தமிழா என்று கேட்டு இருக்கிறேன். அதற்க்கு "I dont know Tamil, since I grew up in Mumbai" என்று சொன்னார். எப்பொழுதும் தன்னை ஒரு "தமிழர்" என்று அடையாள படுத்த படுவதை இவர் விரும்பியதில்லை. ஆனால் மற்ற மொழி மக்கள் வந்தால் அவர்களுடன் ஹிந்தியில் பேசுவதன் மூலம் தான் ஒரு "வட இந்தியர்" என்று அடையாளபடுத்த படுவதை விரும்பி இருக்கிறார். சரி, மும்பையில் வளர்ந்தால் இருக்கும் என்று விட்டு விட்டேன்.

மற்றும் ஒரு பெண் சந்தித்தேன், அவரின் பையனும் முகுந்தும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். அவரின் பெயரை வைத்து தமிழ் பெயர் என்று கணிக்க முடிந்ததால், தமிழில் பேசலாம் என்று பேச ஆரம்பித்தேன், அதற்க்கு அவர், "தமிழா கொஞ்சம் கஷ்டம், lets talk in english" என்றார். பின்னர் பேசியபோது, தான் சென்னையில் தான் பிறந்து வளர்ந்தாலும், தமிழில் படிக்கவில்லை என்றும்  தான் படித்ததெல்லாம் சமஸ்கிருதம்/பிரெஞ்சு/இத்தாலியன் என்றும் அதனால் "தமில் கொஞ்சம் கொஞ்சம் வரும்" என்று கூறினார்.

பின்னர் ஒரு "play date" இன் போது  குழந்தைகள் வேறு ஒரு மொழி கற்று கொடுப்பது குறித்து ஒரு முறை பேசி கொண்டு இருந்தோம், அப்பொழுது நான்  "தமிழ் பள்ளியில் விரும்பினால் சேர்த்து குழந்தைகளுக்கு தமிழ் சொல்லி கொடுக்கலாமே, ஜியார்ஜியாவில் மொழி கிரெடிட் வாங்கி கொள்ளலாம்" என்று கூறியதற்கு "இல்லை வேண்டாம் இண்டரெஸ்ட் இல்லை" என்று  சொல்லி விட்டார். அதனால் நானும் திரும்ப அதனை குறித்து பேச விரும்பவில்லை. ஆனால் கடந்த வாரம் பேசும் பொழுது, தன் குழந்தைகள் சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் கற்று கொள்ளுகிறார்கள் "பால விகாரில்" என்றார்.


அதனை கேட்டவுடன் எனக்கு தோன்றியது இதுதான் , இவர் தன்னை எப்படி அடையாள படுத்தி கொள்ள விழைகிறார் ?. எப்படியும் அமெரிக்காவை / அமெரிக்கர்களை பொருத்தவரை "நாமெல்லாம் ஒரு ஏலியன், அல்லது சவுத் ஈஸ்ட் ஆசியன் அல்லது person of indian origin". இதில் மற்ற மொழி காரர்களாவது, நாங்கள் person of indian origin, எங்கள் மொழி, ஹிந்தி அல்லது எங்கள் மொழி ஹிந்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம். என்று சொல்லுவதில் பெருமை கொள்ளுகிறார்கள். ஆனால்மேலே நான் குறிப்பிட்ட பெண்களை போன்றோர்  எப்படி தன்னை அடையாளபடுத்துவார்கள்? " நாங்கள் person of indian origin, எங்கள் மொழி சமஸ்கிருதம்" என்று அடையாள படுத்த விரும்புகிறார்களா? தெரியவில்லை.

Images from google images

இரண்டாவது விஷயம், "குட்டி சுவர் பசங்களை" போன்றது. அம்மாவின் அறுவை சிகிச்சைக்கு என்று மதுரை சென்ற போது  நான் கவனித்தது இது. என் அண்ணன் தற்போது மதுரையில் வசிக்கும் தெருவில் உள்ள ஒரு டீ கடையில் தினமும் சில விடலை பசங்க பேப்பர் படிக்கிறேன், போன் பார்க்குறேன் என்று வெட்டியாக உக்கார்ந்து கொண்டு இருப்பதை பார்த்தேன். இது போன்று ஊருக்கு ஒரு குட்டி சுவர் அல்லது டீ கடை என்று எல்லா தெரு முனைகளிலும் தினமும் இப்படி உக்கார்ந்து கொண்டு வேலை வெட்டியில்லாமல் கதை அடிப்பதை, என்னுடைய சிறு வயதில் இருந்து, பதின்ம வயது தொடர்ந்து  தற்போது வரை பார்த்து இருக்கிறேன். இவர்களை பார்க்கும் போதெல்லாம், "உங்களுக்கு எல்லாம் வேலை வெட்டி இருக்காதா? , இப்படி நேரத்தை கடத்துறீங்களே"என்று பல முறை கேட்க தோன்றி இருக்கிறது. எதுக்கு நமக்கு வம்பு என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து இருக்கிறேன்.

நேற்று , அண்ணனிடம் பேசிய போது, அருகில் பெரிய சண்டை சத்தம் கேட்டது, என்னவென்று விசாரித்த போது, "குட்டி சுவர் பசங்களில் ஒருவன், தெருவில் இருக்கும் யாரோ ஒரு பெண்ணை பார்த்து கிண்டல் செய்ய, அந்த பெண் போலீசில் ஈவ் டீசிங் கேசில்" போட்டு கொடுத்து விட்டதாகவும், அதற்க்கு அந்த பையனின் அம்மா, அந்த பெண் வீட்டில் வந்து தகராறு செய்ததாகவும் குறிபிட்டார். முதலில் தன் மகனை இப்படி வேலை வெட்டியில்லாமல் ஊர் சுற்ற அனுமதித்த அம்மா, கிண்டல் செய்வதை அனுமதித்த அம்மா, எப்படி போலீசில் பிடித்து கொடுத்ததை மட்டும் குற்றம் என்று சொல்லுகிறார் என்று தெரியவில்லை.

உண்மையில் இப்படி குட்டி சுவர் பசங்களுக்கு என்று வேலை வெட்டி இல்லையா? எப்படி அவர்களின் பெற்றோர் இதனை அனுமதிக்கிறார்கள்? என்று தெரியவில்லை.



டிஸ்கி

இங்கே எழுதி இருக்கும் இரண்டு விசயங்களும் என்னுடைய சொந்த அனுபவத்தில் நான் கண்டவை மட்டுமே..யாருடைய எண்ணங்களையும் செயல்களையும் விமரிசிக்க வில்லை இங்கு.

நன்றி


Tuesday, November 24, 2015

பார்த்தது, படித்தது, கேட்டது!

பார்த்தது

வெற்றியை நிர்ணயிப்பது எது? என்ற TED டாக் ஒன்று பார்க்க நேர்ந்தது. அஞ்செலா லீ என்னும் ஒரு அம்மா தன்னுடைய அனுபவங்கள் மற்றும் ஆராய்ச்சியை பற்றி அதில் விளக்கி இருந்தார்கள். பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கிய சுற்றுசூழலில் வளரும் அல்லது இருக்கும் பள்ளிகூடங்களில் படிக்கும் குழந்தைகள் படிப்பில் மற்றும் வாழ்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் அவர்களுக்கு வேண்டிய ஒரே ஒரு குணம் "Grit" தமிழில் சொல்ல வேண்டும் என்றால் "மனஉறுதி". நம்மால் முடியும் செய்யமுடியும், வெற்றிபெற முடியும் என்ற மனஉறுதி மற்றும் அதனை செயல்படுத்த அவர்கள் எடுக்கும் விடா முயற்சி. எத்தனை தடைகள் வந்தாலும், யார் என்ன என்ன சொன்னாலும், கீழே தள்ளினாலும், கேவலப்படுத்தினாலும் மீண்டும் மீண்டும் மீண்டு வர செய்யும் "மனஉறுதி"

இதனை பார்த்தவுடன் எனக்கு தோன்றியது இது தான், நம்மூரில் 10ஆம் வகுப்பு அல்லது +2 ரிசல்ட் வந்தவுடன் ஏழை குடும்பத்தில் இருந்து வந்து அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படித்து நிறைய மார்க் வாங்கிய  மாணவ மாணவியர் பற்றிய குறிப்பு செய்தி பேட்டி கட்டாயம் இருக்கும். அவர்களுடைய பேட்டியில் முக்கியமாக நிறைய மாணவர்கள் குறிப்பிடுவது, "கட்டாயம் நல்ல மார்க் வாங்க வேண்டும் என்று மனஉறுதியுடன் விடாமல் படித்தேன்" என்று கிட்டத்தட்ட அனைவரும் சொல்லுவார்கள். இது மேலோட்டமாக ஒரு செய்தியாக பார்க்காமல், அவர்கள் இந்த மார்க் எடுக்க என்று எத்தனை பேர் வீட்டு வேலை, வயல் வேலை, குழந்தைகள் பார்ப்பது, அடுத்தவர்கள் பேச்சை, கிண்டலை  தாங்கி கொண்டு, மீண்டும் மீண்டும் வெற்றி ஒன்றே இலக்கு என்று முயற்சி செய்ததால் மட்டுமே இந்த நிலை வந்து இருக்கிறார்கள் என்று பார்த்தால், அவர்களின் மனஉறுதி தெரியும்.

இது பள்ளிப்படிப்பில் இருந்து கல்லூரி மற்றும் மேல்படிப்பு என்று அனைத்திற்கும் பொருந்தும் என்றாலும், நல்ல வேலை எடுப்பது , வாழ்கையில் முன்னேற வேண்டும் என்ற வெறி, எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தவிடு பொடியாக்க கூடிய தன்னம்பிக்கை மட்டுமே வெற்றிக்கான தாரக மந்திரம்.

அந்த TED வீடியோ இங்கே


படித்தது
கயாஸ் தியரியில் பட்டர்பிளை எபக்ட் என்று தியரி உண்டு, அதன் படி, உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் எப்படியோ அடுத்த நிகழ்வுடன் தொடர்பு கொண்டவை.  அப்படி பார்த்தால்
சிரியாவிற்கும், கலிபோர்னியாவிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு என்றஅறிவியல் கட்டுரை  ஒன்று படிக்க நேர்ந்தது. இரண்டிலும் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இது El Nino எனப்படும் பூமி சூடாவதன் எதிரொலி உலகெங்கும் மழை, வெள்ளம், என்று  ஒரு பக்கம், மழையின்மை மற்றும் பஞ்சம்  இன்னொரு பக்கம்.  ஏன் இந்தியாவில் ஏற்படும் பெருமழை மற்றும் வெள்ளம் கூட இந்திய பெருங்கடல் சூடாவதன் விளைவு என்றும் நம்பபடுகிறது.

சிரியாவில் நடந்த உள்நாட்டு கலவரதிற்கு அங்கு ஏற்பட்ட பஞ்சமும் ஒரு காரணம்  பின்னர் மக்கள் அகதிகளாக கூட்டம் கூட்டமாக வெளியேறுவதும் அதன் தொடர்பாக ஐரோப்பா முழுதிலும் நடக்கும் பொருளாதார மாற்றம்  மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் என்று உலகில் நடக்கும் அனைத்தும் எதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டவை என்று அறியும் போது ஆச்சரிய படாமல் இருக்க முடியவில்லை.


கேட்டது

எப்போதும் இசையில் ஆர்வம் உண்டு. இந்திய இசை மட்டுமே நிறைய கேட்டு இருக்கிறேன். தமிழ் மட்டும் அல்லாமால் ஹிந்தியும் நிறைய கேட்பதுண்டு. வெறும் இந்திய இசை மட்டுமே கேட்டு கொண்டு இருந்த நான் மெதுவாக இந்த வருடம் முழுதும் நிறைய வெளிநாட்டு இசை மற்றும் பாடல்கள் கேட்டு வருகிறேன். ஒரு சில பாடல்கள் கேட்கும் போது அடபாவிகளா இது தமிழ் பாட்டுல கேட்டு இருக்கோமோ, எப்படி காபி பாருங்க என்று தோன்றும். உதாரணமாக 1980 இல் வெளிவந்த  Bob Marley அவர்களின் "Get up Stand up" அப்படியே, "அவள் வருவாளா, அவள் வருவாளா" என்ற பாட்டில் காப்பி அடிக்க பட்டு இருக்கும்.





ஆயினும் எனக்கு ஒரு சில தமிழ் பாடல்கள் மனதை விட்டு நீங்காதவை. முன்பே கேட்டு இருக்கிறேன் என்றாலும் தற்போது கேட்பது என்றால் ஷ்ரியா கோஷல் குரலில் "மன்னிப்பாயா" என்ற VTV  பாட்டு. நல்ல குரல் வளம்.



ஷகிரா அவர்களின் "Waka Waka" பாடலும் அற்புதமாக இருக்கிறது. 2010 ஆம் ஆண்டு ஆப்ரிக்கா உலககோப்பை கால்பந்து விளையாட்டுக்காக என்று அவர் பாடியது. கேட்டவுடன் டான்ஸ் ஆடவேண்டும் போல இருக்கும் பாட்டு இது.


அதே போல, இன்னொருவரும் என்னுடைய பாவோரிட், Adele அவர்களின் குரலுக்கு நான் அடிமை. தற்போது அவரின் "Hello" என்ற பாடல் மட்டுமே என்னுடைய பாவோரிட் லிஸ்ட் இல் இருக்கிறது.



ஒன்று மட்டும் உண்மை, இசைக்கு எந்த மொழியும் வித்தியாசமும் இல்லை. ரசிப்புத்தன்மை இருக்கிறவரை எல்லா இசையிலும் நனையலாம்.


நன்றி



References

http://www.pnas.org/content/112/11/3241




Friday, November 20, 2015

குறைந்த சேதாரம், கூலி என்னும் நகைக்கடைகளின் ஏமாற்று வேலை!


சிறு வயது முதல் நகை தொழில் செய்பவர்கள் அருகில் இருந்து இருக்கிறேன். எங்கள் குடும்பத்தில் சிலரும் இந்த நகை செய்யும் வேலையில் இருந்து இருக்கிறார்கள் என்பதால் நகை எப்படி தங்கத்தில் இருந்து செய்யபடுகிறது என்பது குறித்த சில அடிப்படை விஷயங்கள் எனக்கு தெரியும். எப்பொழுதெல்லாம் பெரிய பெரிய நகை கடை காரர்கள் குறைந்த சேதாரம், 0% சேதாரம் என்று கூவி கூவி விற்கும் போது எல்லாம் அடபாவிங்களா எப்படி எல்லாம் ஏமாத்துறீங்க என்று நினைப்பது உண்டு. முகநூலில் குடும்ப நண்பர் ஒருவர் ஷேர் செய்திருந்த தங்க நகை தொழில் குறித்த சில விசயங்களும், எப்படி சேதாரம் இல்லை என்று கூவும் நகை கடை காரர்களின் பம்மாத்து வேலைகளும் இங்கே. இது தங்க நகை செய்யும் நண்பர் ஒருவர் எழுதியது, அவரின் சம்மதத்துடன் இங்கே வெளியிடப்படுகிறது.
தேங்க்ஸ் டு கூகிள் இமேஜ்
இனியும் ஏமாறவேண்டாமே நண்பர்களே.....
ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தொழில் ரகசியம் என்று இருக்கும், அது போலவே நகைதொழிலுக்கும் இருந்தது, ஆனால் இன்று சில நகைகடை விளம்பரங்களில், அடித்து நொறுக்கப்பட்ட சேதாரம் என்றும், எங்கள் கடையில் நகை வாங்கினால் ஆஹா மற்ற கடையில் வாங்கினால் ஸ்வாகா, எங்கள் கடையில் மட்டும்தான் நிறைய தங்கம் கொஞ்சம் செம்பு மற்ற கடையில் நிறைய செம்பு கொஞ்சம்தான் தங்கம், என்று பிரபலமான நடிகர் நடிகைகள் வைத்து விளம்பரம் செய்து மக்களை தன்னுடைய மாய வலைக்குள் சிக்க வைக்கின்றனர்,
இப்படிப்பட்ட விளம்பரங்களை பார்த்து அந்த பெரிய கடையில் போய் நகைகள் வாங்கி, தன் தோழியருடன் ஏய் நேற்று நான் அந்த கடையில் இந்த நகைவாங்கினேன்டி, ஏய் இந்த கடையில் அந்த நகை வாங்கினேன்டி, சேதாரம் ரொம்ப கம்மியா தர்றாங்க, என்று பெருமையாக ஏமாந்து வரும் மக்கள் அதை பெருமையாக சொல்வதை கேட்கும் போது குறைந்த சேதாரத்தில் நீங்கள் வாங்கும் நகைகளின் தரத்தை பற்றி சிந்திப்பதில்லை, எனவே சில உண்மைகளை உடைத்து காட்டவேண்டிய காலக்கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது,
தங்க நகை எப்படி செய்யபடுகிறது?
முதலில் தங்கத்தை உருக்கி, அதன் பிறகு அதை கம்பியாக்க, டை என சொல்ல படும் டிசைன் வடிவம் அமைக்க, அதன் பிறகு அந்த மாடலுக்கு ஏற்ற மாதிரி வடிவமைத்து, பிறகு பாலிஷ் போட, கட்டிங் செய்ய, கல் வைக்க, என எல்லா வேலைகளையும் முடித்து, ஹால் மார்க் முத்திரை பதித்து என ஒரு நகை செய்து முடிக்க கிட்டத்தட்ட பத்து தொழிலாளர்களின் பட்டறை சென்று வர வேண்டியது இருக்கின்றது, இந்த அனைத்து வேலைகள் செய்யும் தொழிலாளிக்கும் சேதாரம் மற்றும் கூலி பகிர்ந்து கொடுக்க வேண்டும்,
உங்களிடம் வாங்கும் சேதாரத்தில் இவ்வளவு வேலைகளையும் செய்து முடிக்க வேண்டும் என்றால், விளம்பரத்தில் சொல்லப்படும் 3சதவிகித அல்லது 4சதவிகித அல்லது 5சதவிகித சேதாரத்தில் செய்து விட நிச்சயமாக முடியாது, ஏன் என்றால் எந்த நகைதொழிலாளியும் கூலி சேதாரம் இல்லாமல் வேலை செய்து கொடுப்பதில்லை.
ஹால் மார்க் 916 நகைகள் என்றால் என்ன? 
ஒரு நகையின் தயாரித்து முடித்த பிறகு அந்த நகையிலிருந்து சிறு பகுதியில் வெட்டி அதனை உருக்கி சோதனை செய்து அந்த தங்கத்தின் தரம் 91.60 எனப்படும் ஹால் மார்க் தரத்தில் இருக்கிறதா என அறிந்து, அதன் பின்பு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட முக்கோண மற்றும் 916 என்ற முத்திரையை லேசர் ஒளிக்கதிர் கொண்ட கருவியால் பதிக்கச்செய்த நகைகள் மட்டுமே உண்மையான ஹால் மார்க் நகை, மேலும் ஹால் மார்க் தரத்தில் ஒரு நகை தயாரிக்க வேண்டும் என்றால் ( 10 கிராம்) சொக்கத்தங்கத்தில் ( 800 மில்லி கிராம்) செம்பு மட்டுமே கலவையாக சேர்க்கவேண்டும், மேலும் ஒரு நகை தயாரிக்க வேண்டும் என்றால் அதை ஒரு நகைதொழிலாளி மட்டுமே செய்து விட முடியாது,
இப்போது சிந்தித்து பாருங்கள் குறைந்த சேதாரத்தில் நீங்கள் வாங்கும் நகைகள் உண்மையான நகையாக இருக்க முடியுமா என்றால் கிடையாது என்பதுதான் உண்மை,
இதையும் மீறி நாங்கள் சோதனை செய்து பார்த்தோம் சரியாகத்தான் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் பெரிய கடையில் குறைந்த சேதாரத்தில் நீங்கள் வாங்கிய நகையை மீண்டும் திரும்ப கொண்டுசென்று கொடுத்து இந்த நகையை விற்க வேண்டும் பணம் தாருங்கள் என்று கேட்டு பாருங்கள் நிச்சயமாக பணம் தர மாட்டார்கள் இந்த நகையை தந்து வேறு நகை மட்டுமே எங்கள் நிறுவனத்தில் வாங்க முடியும் பணம் தர மாட்டோம் என்பதுதான் பதிலாக வரும், இதுதான் அவர்கள் தொழில் தந்திரம், பெருமையாக ஏமாந்து கடையை விட்டு வெளியே வருவோம்,
ஞாயமான சேதாரம் கொடுத்து வாங்கும் நகைகளுக்கும், குறைந்த சேதாரத்தில் நீங்கள் வாங்கும் நகைகளுக்கும் உள்ள வித்தியாசம் சொல்கிறேன் கேளுங்கள்,
ஞாயமான சேதாரம் கொடுத்து வாங்கும் நகைகளில் உள்ள கல் மற்றும் பாசி எடை கழித்து தரப்படும், நீங்கள் வாங்கும் ஹால் மார்க் நகைகள் ஏதாவது பணதேவைகளுக்காக விற்க போகும்போது அன்றைய மார்க்கெட் விலைக்கு பணமாக தரப்படும். கல் நகைகளில் கல்லிற்கான பணத்தை வாங்கி கொண்டு, கல் எடையை முற்றிலும் கழித்து தரப்படும், 10 கிராம் சுத்தமான தங்கத்தில் 800 மில்லி கிராம் செம்பு என்ற சரியான கணக்கில் சேர்க்கப்படுகிறது,
இனி குறைந்த சேதாரத்தில் நீங்கள் வாங்கும் நகைகளை பார்ப்போம்,
கல் மற்றும் பாசி எடை கழித்து தரப்படுவதில்லை கல் பாசி எடை உங்களிடம் தங்கத்திற்கான பணமாக வசூல் செய்து ஏமாற்ற படுகிறீர்கள், நீங்கள் வாங்கும் நகையை திரும்ப கொடுத்து நகையாக மட்டுமே வாங்க முடியும் பணமாக வாங்க முடியாது, 10 கிராம் சுத்தமான தங்கத்தில் 800 மில்லி கிராம் செம்பு என்ற சரியான கணக்கில் சேர்க்கப்படுவது இல்லை, ஒரு வேளை நீங்கள் வெளியில் எங்காவது சோதனை செய்து கண்டுபிடித்து அந்த கடையில் போய் உங்களிடம் வாங்கிய நகையின் தரம் குறைகிறது என்று கேட்டால் கூட அங்கே மழுப்பலான பதிலும் இதை வெளியே சொல்லாமல் இருக்க எவ்வளவு பணம் வேண்டும் என்ற கேள்விதான் பதிலாக வரும்,
இப்போது உங்களுக்கு அந்த விளம்பர படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் வந்தா நஷ்டத்தை தருவார்கள்?
எனவே குறைந்த சேதாரம் என்று போய் ஏமாற வேண்டாம், ஞாயமான சேதாரம் கொடுத்து நகைகள் வாங்கி தரமான தங்கத்தை வாங்கி செல்லுங்கள்.

Wednesday, November 18, 2015

வேலைக்கார தலைமை ம், முன்னேற்றமும்!

ஆபிசில் வழக்கமாக நடக்கும் ரெவ்யு டைம் இல் சில KPI எனக்கு உண்டு. அதாவது சில விஷயங்கள் நான் முடித்து இருக்க வேண்டும், அதில் ஒன்று பிசினஸ் அல்லது லீடர்ஷிப் மீட்டிங் ஏதேனும் ஒன்று அட்டெண்ட் செய்து இருக்க வேண்டும். அதற்காக என்று ஒரு லஞ்ச் அண்ட் லேர்ன் எனப்படும் லஞ்ச் டைமில் நடக்கும் மீட்டிங் ஒன்றுக்கு செல்ல நேர்ந்தது. அது "Servant Leadership" எனப்படும் தமிழில் அப்படியே மொழிபெயர்த்தால் "வேலைக்கார தலைமை" அல்லது உங்களில் ஒருவன் என்று கருதப்படும் தலைமை.

thanks to google images

இந்த மீட்டிங் ஆரம்பிக்கும் போதே அதனை நடத்திய பெண்மணி, உங்களுக்கு தெரிந்த ஒரு செர்வன்ட் லீடர் யாரேனும் கூறுங்கள் என்றார். நான் எதேச்சையாக நம்ம ஊரில தான் நிறைய "நான் உங்களில் ஒருவன் டைப்" தலைவர்கள் இருக்கிறார்களே என்று நினைத்து "காந்தி" என்றேன். அதற்க்கு அந்த அம்மா, சரியான விடை. அதே போல "மண்டேலா, மார்டின் லூதர் கிங்" அனைவரும் சில உதாரணங்கள் என்றார்.  இவையெல்லாம் அரசியல் தலைவர்கள், எப்படி மக்களை தங்களின் பேச்சுத்திறன், நடவடிக்கை மற்றும் செயம் மூலம் தனைகளை தொடர வைத்தார்களோ அதே போல ஒரு நிறுவனத்தில் தலை பொறுப்பில் இருப்பவர்கள் effective leader ஆக என்ன என்ன தெரிந்து கொள்ள வேண்டும் எப்படி இதனை அணுக வேண்டும் என்பது குறித்த நிறைய சிந்தனைகள் அங்கு வெளிப்பட்டன.

உதாரணமாக சில இங்கே


  1. ஒவ்வொரு மனிதனைனுக்கும் தனித்திறன் உண்டு அதனை கண்டுபிடித்து அவரால் சாதிக்க முடியும் என்று நம்பி அவரின் அறிவுக்கு மரியாதை கொடுப்பது.
  2. ஒவ்வொரு மனிதனின் தனித்திறனையும் தூண்டும் வண்ணம் அவர்களை உற்சாகப்படுத்துவது, சேலஞ்ச் செய்வது என்று தனித்திறனை வெளியே கொண்டு வர வைப்பது.
  3. நம் பொது நோக்கு என்ன? அதனை அடைய எப்படி ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று தெளிவுபடுத்துவது,  தாமே ஒரு முன்னுதாரணமாக இருந்து அதனை செயல்படுத்துவது.
  4. அடுத்தவர்கள் மீது அவர்கள் சொல்லும் சொற்களை நன்கு கவனிப்பது அவர்கள் பேச்சுக்கு மரியாதை கொடுப்பது, அவர்கள் பேசுவதில் ஏதேனும் தவறிருந்தால் அனைவர் முன்பும் சுட்டி காட்டாமல் இருப்பது, ஆனால் தனிமையில் அதனை எப்படி தவிர்க்கலாம் என்று சொல்லுவது. மொத்தத்தில், தன்னுடன் இருக்கும் மக்களின் நம்பிக்கையை பெறுவது. தன் தலைவன் அல்லது தலைவி தன் நலனில் அக்கறை கொண்டு இருக்கிறார். நம்மை கைவிட மாட்டார் என்று தொண்டனை/கூட வேலை பார்பவர்களை/ மக்களை நம்ப வைப்பது மிக முக்கியம்.
  5. சுயநலமில்லாத மக்களுக்கு வழிகாட்டியாக செயல்படுவது.
  6. பெருமையுடன் சரியான நேரத்திற்காக காத்திருப்பது. ஒரு பிரச்னை வந்து விட்டது, அதனை தடுக்க அல்லது எதிர்நோக்க என்று சில மீட்டிங் கள் அல்லது தீர்வுகள் செயல்படுத்த படுகிறது ஆனாலும் அது எதிர்மறை விளைவை மட்டுமே தருகிறது என்றாலும், பொறுமையாக விடா முயற்சியுடன் திரும்ப திரும்ப பல தீர்வுகள் காண்பது ,முயற்சி செய்வது. 
  7. உங்களில் ஒருவன் லீடர் , அனைவரும் எதோ ஒரு குறை கொண்டவர்கள் தன்னையும் சேர்த்து என்று நன்கு அறிந்து இருப்பார்கள். அதனால் அனைவரையும் அரவணைத்து, டீமின்/நிறுவனத்தின்/நாட்டின்/மாநிலத்தின் முன்னேற்றம் என்பதே ஒரே நோக்காய் கொண்டு, அனைவரையும் தங்களால் முடிந்த அதிகபட்ச உழைப்பை வெளிக்கொண்டுவர செய்து, கிடைக்கும் பலனில் அனைவரின் பங்கையும் நன்கு உலகுக்கு வெளிகாட்டி இது மொத்த டீமின் செயல் பாடு தனி ஒருவரின் பங்களிப்பு அல்ல என்று அறிய வைப்பது.

இதனை குறித்த James C  Hunter மற்றும் John C Maxwell போன்றோரின் புத்தகங்களை குறிப்பிட்ட அவர், ஒரு நிறுவனத்தில் "உங்களில் ஒருவன்" என்னும் தலைமையில் இருப்பவர்கள் கீழே வேலை பார்க்கும் மக்களும் சரி நிறுவனமும் சரி அதிக பட்ச வெளியீடு கொடுக்கும், லாபம் கொடுக்கும் ஒன்றாக இருக்கும். எப்பொழுது தன்னம்பிக்கை இல்லா தலைமை கீழ் வேலை பார்க்கும் மக்கள் கான்ஸ்டன்ட் டெரொர் அல்லது எப்பொழுது வேலை போகுமோ, எப்பொழுது யார் நம் வேலையை திருடுவார்களோ என்று நினைத்து கொண்டு பயந்து கொண்டு தலைவன் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்களோ அந்த நிறுவனம் வளராது, லாபம் தராது என்றார்.

இது நிறுவன வளர்ச்சிக்கு என்று இல்லை, நாட்டின், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் பொருந்தும் என்பது உண்மை.

நன்றி.


Monday, November 16, 2015

ப்ளேம் கேமும், மழையும் ,பழிக்கு பழியும்!

சில சமயம் சிறுகுழந்தைகளின் புத்தகங்கள் படிக்கும் போது நமக்கு சுருக்கென்று சில விஷயங்கள் உரைக்கும். அப்படி எனக்கு நேர்ந்த சில விசயங்கள் இங்கே. முகுந்துக்கு தினமும் புத்தகம் படிப்பதுண்டு, அப்படி நான் படித்த ஒரு புத்தகம், "The Berenstain Bears"சீரிஸ்  புத்தகம் "The Blame Game".



கதை இது தான், குழந்தைகள் இரண்டு பேரும் சேர்ந்து ஒரு விஷயத்தை செய்வார்கள், அது பிரச்சனையாக முடிந்தால் உடனே..அடுத்தவர்கள் தான் செய்தார்கள் என்று ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்லுவது. பின்னர் அந்த பிரச்னை முடிந்தவுடன் அடுத்த விசயத்திற்கு செல்வது அதிலும் இப்படி ஏதாவது பிரச்சனை எனில் அடுத்தவர் மீது குற்றம் சொல்லுவது..என்று நீண்டு கொண்டே இருக்கும் இது.. கடைசியில் அந்த புக்கில் ஒன்று சொல்லுவார்கள். எப்பொழுதும் அடுத்தவர்கள் மேல் குறை மட்டுமே சொல்லி கொண்டு இருக்காமல் எப்படி அந்த தப்பை சரி செய்வது, திருத்துவது என்று செய்யுங்கள், அதுவே productive என்று.

இதனை படித்தவுடன் கடந்த வார சில நிகழ்வுகள் எனக்கு நினைவுக்கு வந்தன.

உதாரணமாக  ஒன்று,  கடந்த வாரம் கொட்டி தீர்த்த மழை பற்றியது,  அதனை பற்றி மக்கள் செய்த கம்ப்ளைன்.  வாட்ஸ் அப், ட்விட்டர் , FB  என்று அனைத்திலும் மழை  சார்ந்த படங்கள், எப்படி மோசமாக இருக்கிறது பாருங்கள் நம்முடைய உள்கட்டமைப்பு என்று அரசாங்கத்தின் மேல் குறை ப்ளேம் கேம். ஏரி தூர் வரவில்லை, கழிவு நீர் செல்ல வலி இல்லை, காசை வாங்கி கிட்டு இப்படி எல்லா எரியிலையும் வீடு கட்டி இப்படி எங்களை தண்ணியில மிதக்க விட்டுடாங்க என்று நிறைய நிறைய. பொது நோக்கில் சிலர் இதனை செய்கிறார்கள் என்றாலும் பலரும் இதனை ஒரு கிண்டலுக்கு என்றே செய்கிறார்கள் என்று தோன்றியது..எனக்கு இதனை படித்தவுடன் முதலில் தோன்றியது ஒன்று தான் "இவங்க எல்லாம், மழை பெய்தாலும் குறை சொல்லுவாங்க, பெய்யாவிட்டாலும் குறை சொல்லுவாங்க".  அதே போல இவர்கள் இப்படி கதறுவது எல்லாம் தண்ணீர் வடியும் வரை தான், அடுத்து தண்ணீர் வடிந்து வெயில் அடித்தவுடன் மறுபடியும் எந்த ரியல் எஸ்டேட் காரனாவது ஏதாவது ஒரு ஏரியை வளைத்து போட்டு பிளாட் கட்டி குறைந்த விலைக்கு விற்கிறார்  என்று வைத்து கொள்ளுங்கள்  உடனே அங்கு சென்று விழுவார்கள். கழிவு நீர் மேலாண்மை போன்ற அடிப்படை கட்டமைப்பு கூட இல்லாமல் அங்கு பிளாட் கட்டி குடியேறி விடுவார்கள். பின்னர், அரசாங்கம் சரியில்லை என்று பாயிண்ட் அவுட் செய்வது.

அடுத்து அரசாங்கம், இங்கு நான் அரசாங்கம் என்று குறிப்பது அரசியல் வாதிகள் மட்டும் அல்ல, அரசு ஊழியர்களும் தான், எங்கு பணம் கிடைத்தாலும் அங்கு சென்று விடுவார்கள். தங்கள் சுயநலம் மட்டுமே குறிக்கோள், யார் எப்படி போனால் என்ன போகவிட்டால் என்ன, அவர்களும் ப்ளேம் கேம் படிப்பார்கள், நாங்க மட்டுமா செய்யிறோம் எனக்கு மேல இருக்குறவங்க செய்ய சொல்லுறாங்க என்பார்கள், அவர்குக்கு மேலே இருப்பவர்களும் அவருக்கு மேலே என்று படிப்படியாக, முதல்வன் படத்தில் வருவது போல  "everybody"...ப்ளேம் கேம் மட்டுமே இவர்கள் படிப்பது.  அடுத்தவர்களை குறி காட்டிவிடுவது மட்டுமே இவர்களுக்கு தெரிந்தது.

பொது மக்களும் சரி, அரசியல் வாதிகள் அல்லது அரசு ஊழியர்கள் வரை யாரையாவது இறங்கி வேலை செய்ய சொல்லுங்கள், பிரச்சனையை தீர்க்க சொல்லுங்கள், மாட்டார்கள். வெறும் பேச்சு, கிண்டல் என்று மட்டுமே இவர்களுக்கு தெரிந்தது. கேட்டால் ஒருத்தர் மேல் ஒருத்தர் கை காட்டுவது. எதற்கு இந்த ப்ளேம்  கேம்?

அடுத்தது, உலகை உலுக்கிய பாரிஸ் குண்டு வெடிப்பு. என்னுடன் வேலை பார்க்கும் ஒருவருக்கு பாரிஸ் தான் சொந்த ஊர், குடும்பம் அம்மா அப்பா அங்கு இருக்கிறார்கள்  என்பதால் குண்டு வெடிப்பு பற்றி எப்படி ரியாக்ட் செய்தார் என்று பக்கத்தில் இருந்து பார்க்க நேர்ந்தது. பந்தம் பாசம் எல்லாம் எல்லாருக்கும் ஒன்று தானே, எந்த ஊரா இருந்தா என்ன?. அவரின் பெற்றோர் நலமாக இருக்கிறார்கள் என்று அறிந்தவுடன் அவர் சொன்ன ஒன்று என்னை உலுக்கி விட்டது. "நாங்கள் செய்தோம் அதற்க்கு அவர்கள் திருப்பி செய்கிறார்கள்", பலி ஏனோ அப்பாவி மக்கள் தான்..இது எப்போ முடியுமோ" என்று..

சொல்ல போனால் இதுவும் ஒரு வகை பழிக்கு பழி  தான், நீ முதலில் செய்தே, நானும் செய்கிறேன் பாரு என்று அப்பாவி பொது மக்களை குறி வைப்பது. என்னவொரு முதுகெலும்பு இல்லாத செயல். எப்போ தான் இது முடியுமோ! என்ன செய்ய முடியும் நம்மால், உலகெங்கும் சாந்தி நிலவ வேண்டும் என்று பிராத்திப்பதை தவிர.


டிஸ்கி
இந்த பதிவு முழுக்க முழுக்க என்னுடைய எண்ணங்கள் மட்டுமே, எந்த அமைப்பையும் நாட்டையும் எண்ணங்களையும் இங்கே குறிப்பிட, பிரதிபலிக்க இங்கே பதியவில்லை.


நன்றி.












Saturday, November 14, 2015

எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க பாருங்க!


எங்களுக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்கு லோக்கல்  போலீஸ்?  இல் இருந்து போன். நீங்கள் செலுத்த வேண்டிய பைன்/சிட்டி டாக்ஸ்  ஐ செலுத்தவில்லை, உடனே செலுத்தவில்லை எனில் கைது செய்ய நேரிடும். உடனே செலுத்துங்கள் உங்கள் நல்லதுக்கே சொல்லுகிறோம். நாங்கள் கிரெடிட் கார்டு கூட வாங்கி கொள்ளுவோம் என்று போன். அவருக்கு ஒரே பயம். முன்ன பின்ன தெரியாம, எப்படி போலிஸ் ல இருந்து கூப்பிடுவாங்க. என்ன பைன் என்று தெரியலையே..என்று ஒரே குழப்பம். பின்னர் எங்களுக்கு போன் செய்து கேட்டதும் நாங்கள் சொன்னது இது தான். நேரே போலிஸ் ஸ்டேஷன் போய் கேளுங்கள். இல்லை போலிஸ் நம்பருக்கு பேசுங்கள் என்ன பைன் வென்று கேளுங்கள் என்று சொன்னோம். அதன் படியே அவரும் சென்று விசாரித்ததில் அது ஒரு scam என்று தெரிய வந்தது.

இவர்களின் ஸ்ரட்ரஜி  இது தான், புதிதாக யாரவது வந்தால் அவர்களை நோட் செய்வது,  போன் நம்பரைதெரிந்து  கொள்ளுவது அதுவும் இந்தியன் என்றால் இது போன்று போலிஸ் என்றெல்லாம் கொஞ்சம் மிரட்டினலே பயந்து விடுவார்கள் என்று மிரட்டுவது. பின்னர் கிரெடிட் கார்ட் போன்ற டீடைல் வாங்கி கொண்டு பணத்தை சுருட்டுவது. இது தான் அவர்கள் பிளான்.


thanks to google images



நிறைய ஈமெயில் scam கேள்வி பட்டு இருப்போம். முன்னெலாம் ஈமெயில் அடித்து கொள்ளை அடித்தவர்கள் இப்பொழுது இப்படி எல்லாம் ஆரம்பித்து இருக்கிறார்கள் போல. எங்கள் லோக்கல் போலிசிடம் இருந்து இதற்கெல்லாம் ஏமாற வேண்டாம் என்று செய்தி வந்து இருக்கிறது.

எனக்கு தெரிந்த சில ஈமெயில் scam கள் இங்கே

நைஜீரியன் ஈமெயில் scam 

முக்கியமாக நம்முடைய ஈமெயில் ஜன்க் பாக்ஸ்ஐ திறந்தாலே, நிறைய ஈமெயில் வரும் அதுவும் நைஜீரியன் scam எனப்படும் "பல கோடி பணம் உங்களுக்கு வந்து இருக்கிறது, வாங்கி கொள்ளுங்கள்" என்று பல பல இடங்களில் இருந்து பல பல வண்ணத்தில் வரும். அதில் பேராசை பட்டு ரிப்ளை செய்து பணத்தை விட்டவர்கள் நிறைய பேர்.

பெண்கள் உங்களுக்காக காத்திருகிறார்கள் ,Online dating/marriage scam 

இன்னும் சில scam கள் online dating, மற்றும் பெண்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் என்பது போன்றது. இதில் சபலப்பட்டு காசை விட்டவர்களும் உண்டு.

உடல்நிலை Health scam

அடுத்து நான் நிறைய பார்க்கும் scam கள் உடல் நலத்தை குறிவைத்து செய்ய படும் சில, உதாரணமாக "எடை குறைய வேண்டுமா?, முடி வளர வேண்டுமா?, முகம் பளபளக்க வேண்டுமா?, எப்போதும் இளமை வேண்டுமா?" என்பன போன்றவை" இதில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.

வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்கும் Work from home scam 

இன்னும் சில scam கள் வீட்டில் இருந்தே வேலை பாருங்கள் என்று வரும். ஆனால் அப்படி பார்க்க வேண்டும் என்றால் பணம் கட்ட சொல்லுவார்கள், பின்னர் பணம் தான் சென்று கொண்டே இருக்குமே தவிர, உங்களுக்கு வீட்டில் இருந்து வேலையும் கிடைக்காது, பணமும் கிடைக்காது. இது போன்ற வீட்டில் இருந்தே வேலை என்பது எல்லாம் சும்மா பம்மாத்து மட்டுமே. நம்பி ஏமாறாதீர்கள்.

பர்சனல் ரிப்போர்ட் scam 

இப்போது இன்னும் சில scam கள் நான் கேள்வி படுகிறேன், அது, உங்களை பற்றி யாரோ தேடி இருக்கிறார்கள், ரிப்போர்ட் கேட்டு இருக்கிறார்கள், அவர்கள் யார் என்று தெரிய வேண்டும் என்றால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்று ஈமெயில் வரும்..யாராக இருக்கும் என்று நீங்கள் கிளிக் செய்தால் போதும் உங்கள் கம்ப்யுட்டரில் ஏதாவது வைரஸ் நிறுவி விட்டு விடுவார்கள்.

பிஷிங் scam 

அதே போல ஒரு phising scam, இது பயங்கர authentic போல உங்கள் பாங்கில் இருந்து வருவது போல இருக்கும். உங்கள் password மாற்ற சொல்லி அனுப்பி இருப்பார்கள். உங்கள் பேங்க் லோகோ எல்லாம் இருப்பதை பார்த்து நீங்களும் கிளிக் செய்து கொடுத்தீர்கள் என்றால் உங்கள் அக்கௌன்ட் ஹாக் செய்யப்பட்டு விடும். மிக மிக கவனம் தேவை. எந்த பாங்கும், ஈமெயில் செர்வேரும் இப்படி உங்களிடம் பாஸ்வோர்ட் மாற்ற சொல்லி ஈமெயில் அனுப்ப மாட்டார்கள். அதனால் கவனம் தேவை.



இவையெல்லாம் பொதுவான ஈமெயில் scam கள் என்றாலும், தற்போது போன் மூலம் கூட இப்படி எல்லாம் ஏமாற்ற முனைகிறார்கள் என்று தெரிகிறது. இவர்களின் முழு முயற்சியும் உங்களின் கிரெடிட் கார்டு அல்லது பணத்தின் மீது மட்டும் அல்லாமல் உங்களின் ஐடென்டிட்டி திருடுவதும் தான். நீங்கள் அமெரிக்காவில் வசிப்பவர் எனில் உங்களின் SSN எண்ணை யாரிடமும் சொல்லி விடாதீர்கள் அப்படி சொல்லி விட்டீர்கள் எனில் உங்கள் எண்ணை கொண்டு நீங்கள் தான் என்று வேருருவர் கிரெடிட் கார்டு முதல் எல்லாமே வாங்கி விடுவார். அதனால் எப்பொழுதும் எல்லா இடத்திலும் கவனம் தேவை.

டிஸ்கி

இது நான் சந்தித்த பார்த்த சில scam பற்றிய என்னுடைய அனுபவங்கள் மட்டுமே.


நன்றி.


Thursday, November 12, 2015

இன்றைக்கு இந்தியாவின் ஸ்டைல்ம், வெர்சுவல் எச்செர்சைசும் !

இரண்டு செய்திகள் கேட்க, பார்க்க நேர்ந்தது.ஒன்று இந்தியாவின் தற்போதைய ஸ்டைல் என்ன என்பதை பற்றியது. அடுத்தது எப்படி மக்கள் தற்போது வெர்ச்சுவல் உடல்பயிற்சி செய்கிறார்கள் என்பதனை பற்றியது.

தீபாவளியை ஒட்டி, இந்தியாவில் இருக்கும் சொந்தம் மற்றும் தோழிகளிடம் பேசி கொண்டு இருந்த போது...என்ன டிரஸ் இப்போ ஸ்பெஷல் என்று கேட்டேன். அவர்கள் சொன்ன ஒவ்வொரு ஸ்டைலும் எதோ முந்தைய ஸ்டைல் ரிபீட் ஆவது போல இருந்தது. அதேபோல, இப்பொழுதெல்லாம் டிரஸ் வாங்கும் தேர்வை வைத்து எந்த தலை முறையை சேர்ந்தவர்கள், எந்த ஊரில் இருக்கிறார்கள் என்பது கூட  என்று கணிக்க முடிகிறது.  மெட்ரோ நகர பெண்கள் சேலையை விட்டு அதிக தூரம் சென்று விட்டதையும் காண முடிகிறது. இளவயது பெண்களிடையே ஓரிரண்டு சேலை வைத்து இருப்பவர்கள் மிக மிக  குறைவு என்று ஆகி விட்டது. சேலை என்பது ஒரு பெஸ்டிவல் டிரஸ் அல்லது விசேசங்களுக்கு மட்டுமே உபயோகிப்பது என்பது இளவயது மட்டும் அல்ல மிடில் ஏஜ் மக்களிடமும் இருக்கிறது. எல்லாரும் தற்போது சுடிதாருக்கு அல்லது குர்தா வுக்கு மாறி விட்டனர்.  வயதானவர்கள் கூட இப்பொழுதெல்லாம் கன்வீநியன்ட் ஆக இருக்ககிறது என்று சுடிதார் அல்லது குர்தா வுக்கு மாறி இருப்பதை சென்னையில் அதிகம் காண முடிகிறது.

ஆனால் இன்னும் மதுரை, திருச்சி போன்ற நகர் புறங்களில் மிடில் ஏஜ் மக்கள் சேலையில் தான் இருக்கிறார்கள் அல்லது விரும்புகிறார்கள் என்றாலும் சுடிதார் போட்டால் யாரும் வேடிக்கை பார்ப்பதில்லை என்பதால் பெரிய பிரச்னை இல்லை. ஆனால் சேலை உடுத்தும் மக்களிடையே இருக்கும்தற்போதைய ட்ரென்ட் பார்க்க கேட்க சிரிப்பாக இருந்தது.
தற்போது சோசியல் மீடியா சேலை பேஷன் போல. நிறைய பெண்கள் எடுத்து இருப்பதாக சொன்னார்கள். FB, Whatsapp மற்றும் யாகூ போன்ற தேடு தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் சிம்பல் கொண்ட புடவைகள் அவை. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பா, என்று பார்க்க சிரிப்பாக இருந்தது.


இதே போல, இன்னொரு டிசைன் என்னவென்றால், பாவாடை தாவணி போல இருக்கும் டபுள் டிசைன் அல்லது டபுள் கலர் ஒன்று.
 



முன்பே நான் குறிப்பிட்ட படி, நிறைய மக்கள் இதனை அடுத்தவர்கள் உடுத்தி இருக்கிறார்கள் அதனால் நமக்கும் நன்றாக இருக்கும் என்று நினைத்து வாங்குகிறார்கள். தங்களின் உடலமைப்புக்கு இது நன்றாக இருக்குமா என்று தெரியாமல் இதனை வாங்குவதால் பல நேரங்களில் அசிங்கமாக இருக்கிறது. எது உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறதோ அதனை மட்டுமே வாங்குங்கள் உடுத்துங்கள். அப்போதைய trend என்று எதையாவது பொறுத்தமில்லாமல் வாங்கி பின்னர் அந்த பேஷன் முடிந்தவுடன் உடுத்தாமல் வீட்டுக்குள் பூட்டி வைப்பதில் என்ன பயன்?.

அடுத்த செய்தி வெர்ச்சுவல் உடற்பயிற்சி குறித்தது. தற்போது குளிர் ஆரம்பித்து விட்டதால் மக்கள் பெரும்பாலும் வெளியில் சென்று உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்று நான் புலம்பிய போது என்னுடன் வேலை பார்க்கும் சிலர்,  வீட்டில் இருந்தே எப்படியாவது வொர்கவுட்  செய்ய என்று "WII-fit" வாங்கியதாக சொன்னார்கள். என்னது அது என்று கேட்டபோது. WII வீடியோ கேமிலேயே ஜாக்கிங், ஸ்கியிங், ஆப்ச்டகுள் கோர்ஸ், யோகா போன்றவை வந்து இருப்பதாகவும். வீடியோ கேமுக்கு வீடியோ கேம் உடற்பயிற்சிக்கு உடற்பயிற்சி ஆயிற்று என்றும் சொன்னார்கள். அட, இது நல்ல ஐடியாவாக இருக்கே என்று நினைத்தேன். ஆனாலும் இது எவ்வளவு தூரம் உண்மையில் உடற்பயிற்சி செய்வதற்கு ஒப்பாகும், இயற்க்கை சூழல், காற்று என்று எதுவும் இல்லாமல் ஒரு வெர்ச்சுவல் உலகில் வாழ முடியும் என்று யோசிக்க தோன்றியது. யாராவது, WII-fit எப்படி இருக்கிறது என்று சொன்னால் black friday விற்பனையில் வாங்குவதை குறித்து யோசிக்கலாம் என்று இருக்கிறேன். தெரிந்தால் சொல்லுங்கள்.

நன்றி.

Tuesday, November 10, 2015

இந்தியர் கருத்தரங்கு ஆர்வமும், ரிஸ்க் எடுக்கும் மனநிலையும் மற்றும் டெங்குவும்.

உலக அளவு கருத்தரங்கு ஒன்று இருக்கு அதற்க்கு உங்களின் பேப்பர் அனுப்புங்க என்று என்னுடன் வேலை பார்த்த ஒருவர் தெரிவித்தார். சரி என்ன கருத்தரங்கு, எங்கே என்று பார்த்தால், ஆச்சரியமாக இருந்தது. அது உலக அளவில் நடத்தபடும் தொற்று நோய்கள் குறித்த கருத்தரங்கு, ஹைதராபாதில் 2016 மார்ச் மாதம் நடக்க இருக்கிறது. அதில் வந்து பேச இருப்பவர்கள் எல்லாரும் உலக அளவில் infectious disease துறையில் பெரிய ஆட்கள். தொற்றுநோய்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும்  நிறைய வெளி நாட்டு மக்கள் கலந்து கொள்ளுகிறார்கள், பேசுகிறார்கள். கேட்கவே சந்தோசமாக பெருமையாக இருந்தது.

சொல்ல போனால் நிறைய உலக அளவிலான கருத்தரங்குகள் இந்தியாவில் நடை பெற்று கொண்டு இருக்கிறது. ஆனால், என்ன இடிக்கிறது என்றால், இவர்கள் கருத்தரங்குக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நோய்கள் கண்டுபிடிப்பதில் அல்லது மருந்து கண்டு பிடிப்பதில் அல்லது பயோடெக் துறையை ஊக்குவிப்பதில்  காட்டினால் நன்றாக இருக்குமோ என்று தோன்றியது. எனக்கு தெரிந்த வரை விரல் விட்டு எண்ண கூடிய அளவிலேயே பயோடெக் மற்றும் ஹெல்த் கேர் கம்பனிகள் உண்டு. இதற்கு என்ன காரணம்?

இதே நிலை குறித்து நான் யோசித்த போது இந்தியர்களின் ரிஸ்க் எடுக்காத மனநிலை குறித்து எண்ண தோன்றியது. அதனை குறித்து மேலும் படிக்கும் போது இது பெரும்பாலான இந்திய மக்களின் மனநிலை என்று அறிய முடிகிறது. வெள்ளைகாரர்கள் நம்மை ஒரு கிளெர்க்குகள் தேசமாக மாற்ற முயன்றதில் ஏற்பட்ட ஒரு பை ப்ரொடக்ட் இது என்று அறிய முடிகிறது. 

ஏனெலில் , பொதுவாக இந்தியர்கள் தங்கள் குழந்தைகள் நன்றாக படித்து ஏதாவது ஒரு வேலை வாங்க வேண்டும், காலம் எல்லாம் மாத சம்பளம் வாங்கி செட்டில் ஆனால் போதும் என்று தான் நினைகிறார்களே தவிர, ஒரு தொழில் தொடங்க வைக்கலாம் அல்லது தொழில் முனைவோர் ஆக ஊக்குவிக்கலாம் என்று நினைக்கும் பெற்றோர் மிக மிக மிக குறைவு. ஏனெலில், அவர்களை பொருத்தவரை, எங்கே தொழில் தொடங்குகிறேர் என்று இருப்பதையும் விட்டு விடுவானோ எதுக்கு ரிஸ்க் என்று சொல்லி பேசாமல் இருந்து விடுகிறார்கள். 

அப்படியே, ஒருவன் தொழில் தொடங்கி ஒரு முறை கீழே விழுந்து அல்லது வெற்றி பெறாமல் போனாலும், இவர்கள் அவனை "அதான் முதல்லையே சொன்னேன்ல.பேசாம இருக்கிற வேலையை பாக்குறத விட்டுட்டு எதுக்கு இந்த ரிஸ்க்.என்று சொல்ல ரெடி ஆக இருக்கிறார்கள்". எந்த ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றாலும் ரிஸ்க் எடுக்கும் மனநிலை மிக முக்கியம். இதனை குறித்த ஒரு காணொளி பார்க்க நேர்ந்தது. அது உங்களுக்காக இங்கே.


 எப்பொழுது ஒருவன் ரிஸ்க் எடுக்க துணிந்து, கீழே விழுந்தாலும் இதெல்லாம் ஒன்றும் இல்லை என்று அடங்காத ஆர்வத்துடன், மேலும் மேலும் பங்கு பெறுகிறானோ அவனே வெற்றி பெறுவான். 


இதனை சார்ந்தே ஒரு செய்தி கேள்விபட நேர்ந்தது அது நடிகர் விவேக் அவர்களின் பையன் டெங்கு காய்ச்சலில் இறந்த செய்தி. இதோடு சேர்த்து நிறைய டெங்கு மரணங்கள் கேள்வி படுகிறேன். 
டெங்கு ஒன்றும் diagnose செய்ய முடியாத அளவு காய்ச்சல் இல்லை. நிறைய டெஸ்ட் கள் உண்டு. ஆனாலும் எப்படி கண்டு பிடிக்க முடியாமல் போனது என்று தான் தெரியவில்லை.

நான் படித்த வாசித்த வரை, இந்தியாவில் கடும் டெங்கு காய்ச்சல் பரவி பிரச்னை கொடுத்து கொண்டு இருக்கிறது. இந்தியா முழுக்க டெங்கு அல்லது மர்ம காய்ச்சல் என்று பரப்பப்பட்டு வருகிறது. செப்டம்பர் அக்டோபர் நேரம் மட்டும் கிட்டத்தட்ட 25,000 மக்கள் இதனால் பாதிக்க பட்டு இருக்கிறார்கள் என்று நான் வாசித்த செய்திகள் தெரிவிகின்றன. இது அறிந்த கணக்கு மட்டுமே.. அறியாமல் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இது போன வருடங்களை விட 100 சதவீதம் அதிகம். 

முதலில் நிறைய நாடுகளில் அறியப்படாமல் இருந்த டெங்கு, தற்போது 120 நாடுகளில் பரவி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

photos adapted from WHO site.

டெங்கு குறித்த சில உண்மைகள்.

டெங்கு, கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் வியாதி.  DENV என்ற வைரஸ் இதனை உண்டாக்குகிறது. அதிலும்  Aedes aegypti   என்ற வகை கொசுக்கள் மட்டுமே இதனை பரப்புகின்றன. நல்ல தண்ணீரில் இனப்பெருக்கம் அடையும் இவை என்பதால், வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளுவது முக்கியம். இது உயிர்கொல்லி நோய் ஆக பெரும்பாலும் இருப்பதில்லை. 100 கேஸ்களில் ஒன்று மட்டுமே சீரியஸ் கண்டிஷன் கொண்டு சென்று விடும். 

பொதுவாக டெங்கு வந்தவுடன் வரும் சில அறிகுறிகள் 
1. காய்ச்சல், 2. பசியின்மை, 3. தலைவலி, 4. மூட்டு வலி மற்றும் வாந்தி 

மிக சீரியஸ் அறிகுறிகள்  

ரத்த கலரில் தடிப்பு அல்லது அலர்ஜி தோலுக்கு அடியில் நிறைய இடங்களில் தென்பட்டால், உடல் முழுக்க ராஷ் போல தடிப்புகள் மற்றும் ஷாக் போல உடல் தூக்கி தூக்கி அடித்தல் போன்றவை.

அறிகுறிகளை நன்கு அறிந்து கொண்ட பிறகு எந்த காய்ச்சல் என்றாலும் முதலில் செய்ய வேண்டியது நன்கு தண்ணீர் சத்து உடம்புக்கு கொடுப்பது. 6 மாதத்துக்கு சிறிய குழந்தை எனில் 100.4 காய்ச்சலுக்கு மேல் என்றால் டாக்டரிடம் அழைத்து செல்வது. சிறு குழந்தைகள் என்றால் காய்ச்சல் மருந்து கொடுத்து காய்ச்சல் குறைந்தால் டாக்டரிடம் அழைத்து செல்வது முக்கியம். பெரிய குழந்தைகள் எனில் நல்ல ரெஸ்ட் எடுக்க வைப்பது.  காய்ச்சல் மருந்து கொடுப்பது 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் எனில் மருத்துவரை அணுகுவது முக்கியம். 

டிஸ்கி 

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நிறைய நோய்கள், வியாதிகள் வந்து கொண்டு இருக்கையில் பயோடெக் துறையை ஊக்குவிப்பது, மருத்துவ துறையை ஊக்குவிப்பது எவ்வளவு முக்கியம் என்பது கண்கூடு. மக்களும் தங்களுக்கு இருக்கும் ரிஸ்க் வேண்டாம் என்ற மனநிலையை மாற்றி தொழில் தொடங்க ஆராய்ச்சி செய்ய ஆர்வம் காட்டுவது முக்கியம் என்று நினைக்கிறன். இது என்னுடைய கருத்துகள் மட்டுமே பொதுவானது அல்ல.

நன்றி 

References 
http://www.denguevirusnet.com/dengue-virus.html
http://www.bbc.com/news/world-asia-india-34398444

Sunday, November 8, 2015

"புலி" முதல் "Spectre" வரை ஓவர் பில்ட் அப்...

வழக்கமா ஒன்னு சொல்லுவாங்க அதாவது "ஓவர் பில்ட் அப் உடம்புக்கு ஆகாது" என்பது. தினம் ஒரு செய்திகள் என  ஒரு படத்துக்கு பயங்கர பில்ட் அப் மற்றும் எதிர்பார்பு எகிற வைத்து, ட்ரைலர் வேறு நன்றாகவே வந்து இன்னும் எதிர்பார்ப்பபை ஏற்றி விட்டு இருந்த ஒரு படம், வெளி வந்த பிறகு எதிர்பார்ப்பை நிறைவேதராமல் இருந்தால் என்னாகும்? பயங்கர ஹைப் உருவாக்கி விட்டு விட்டு படம் பார்க்கும் போது புஸ் என்று ஆகி விட்டால் எப்படி இருக்கும் என்பது நிறைய மக்கள் அனுபவித்து இருப்பார்கள். அப்படி நான் பார்த்த இரண்டு படங்கள் குறித்த என்னுடைய கண்ணோட்டங்கள் இங்கே.

முதலில் "புலி"

thanks to google images


பாண்டஸி படங்கள் மீது எனக்கு நிறைய ஆர்வம் உண்டு. அதுவும் "The Lord of The Rings" படித்ததில்/ பார்த்ததில் இருந்து..இப்படி ஒரு பாண்டஸி உலகம், மக்கள், பழக்க வழக்கங்கள் என்றெல்லாம் கதை, காட்ச்சியமைக்க பட்டால் எப்படி இருக்கும் என்று நினைப்பது உண்டு. தமிழில் பாண்டேசி திரைப் படம் என்று எனக்கு தெரிந்து  பார்த்ததில்லை. பாகுபலி தமிழ் படம் என்று பறை சாற்றப்பட்டாலும், நிறைய தெலுகு வாடை நடிகர்கள் என்று எனக்கு ஒரு விதத்தில் அன்னியப்பட்டு இருந்து இருந்தது.

நான் நிறைய படம் பார்ப்பதில்லை, அப்படியே பார்த்தாலும் நிறைய மக்கள் நல்ல ரெவ்யு கொடுத்தால் மட்டுமே சரி முயற்சி செய்யலாம் என்று செய்வது உண்டு. முக்கியமாக பெரிய நடிக நடிகையர் நடித்த என்றால் பார்க்கவே மாட்டேன். சொல்லபோனால் "கத்தி" படம் கூட சில மாதங்களுக்கு முன்பு பார்த்தது. அப்படி ஒரு நாளில் நிறைய மக்கள் இணையத்தில்  கழுவி கழுவி ஊத்திய ஒரு படம் "புலி" யை அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்க்க ஆரம்பித்தேன்.

சொல்ல போனால் துவக்க காட்சிகள் எல்லாமே குள்ள மனிதர்கள், வேதாளம், பேசும் ஆமை , என்று கொஞ்சம் பாண்டஸி கொஞ்சம் நகைச்சுவை, படமாக்கப்பட்ட விதம், ஸ்ரீதேவி நடிப்பு குட், என்று நன்றாகவே சென்றது என்றாலும் .நேரம் செல்ல செல்ல வழக்கமான மசாலா, நாடகத்தனமான, பார்த்து பார்த்து புளித்து போன கிளைமாக்ஸ் என்றுகுறைகள் இருந்தாலும் ,. நடிகர் விஜயின் மகா மொக்கை படங்களான "சுறா" வுடன் எல்லாம் மக்கள் இதனை ஒப்பிட்டது கொஞ்சம் அதிகமே என்று தோன்றியது.

படத்தை பார்த்த பிறகு, நடிகர் விஜய்" பற்றி  எனக்கு தோன்றியது இது. ஒரு வேளை விஜய் நடிக்காமல் வேறு யாராவது ஒருவர் நடித்து இருந்தால் இந்த படம் இந்த அளவு விமர்சிக்க பட்டு இருக்காதோ..ஏனெனில், அவரின் கத்தி, துப்பாக்கி அளவு மக்கள் எதிர் பார்த்து..ஆனால் அவரோ "பாண்டசி கதாநாயகனாக" நடிக்க.. மக்களோ, வடிவேலுவின் காமெடி போல , "அதுக்கு எல்லாம் நீ லாயக்கில்லை"..என்று மக்கள் நடிகர் விஜயை முத்திரை குத்தி  விட்டார்கள் போல. "மாஸ் படங்கள் மட்டுமே உனக்கு லாயக்கு" என்று அவரை ஒரு பிரேம் க்குள் போட்டு விட்டார்கள்.

விஜயின் ரசிகர்களுக்கே சாதாரண மனிதராக ஒரு பாண்டஸி கதாபத்திரத்தில் பிடிக்கவில்லை போல அதனை விட்டு வெளி வர இது வரை விஜய் அவர்களே முயன்றதில்லை. ஆனால், அப்படியே அவர் இதில் முயன்றாலும் ஓவர் பில்டப் கொடுத்து படத்தை கவுத்து விட்டார்கள் என்று நினைக்கிறன்.


அடுத்தது, "Spectre"

thanks to google images

முந்தய ஜேம்ஸ் பாண்டு படம் "Skyfall" க்கு பிறகு பயங்கர எதிர்பார்ப்பு மற்றும் ட்ரைலர் உருவாக்கிய ஹைப் எல்லாம் சேர்ந்து எப்போடா படம் வரும் என்று எதிர் பார்ப்பை கொடுத்தது டேனியல் கிரேக் அவர்களின் லேட்டஸ்ட் 007 படமான "Spectre". எப்பொழுதும் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் எனக்கு பிடிக்கும் என்றாலும், முந்தய ஜேம்ஸ் பாண்ட் ஆன "சியன் கன்னேரி" மற்றும் "ரோஜெர் மூர்" அளவு இல்லாவிட்டாலும் முசுடு மூஞ்சி வைத்து கொண்டு ஓரளவு 007 ஆக பொருந்தியவர் என்றால் அது "டேனியல் கிரேக்" தான் என்பது என் எண்ணம்.  இது தான் அவரின் கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம் என்று வேறு யாரோ கிளப்பி வேறு விட்டு இருந்தனர்.  அதனாலேயே, சரி பார்த்து விடுவோம் என்று படம் வெளிவந்த இரண்டாம் நாள் அடித்து பிடித்து சென்றாயிற்று. முதல் ரோ ரிக்ளைநிங் சீட் வேறு. படுத்து கொண்டே படம், அதுவும் அட்டகாசமாக "மெக்ஸிகோ சிட்டி யில்"  "Day of Dead" இல் ஆரம்பிக்கிறது.
ஆனால் தொடக்கம் மட்டும் தான் நன்றாக இருந்தது.

"Skyfall"இன் தொடர்ச்சியாக அல்லது முந்தய சில படங்களின் கலவை அல்லது கண்டின்யுடி ஆக என்று சில காட்சிகள் என்று நிறைய போர் அடிக்கும் காட்சிகள். கொடுமை படுத்துகிறேன் பேர்வழி என்று வில்லன் செய்யும் காட்சிகள் எல்லாம் யோவ் நாங்கெல்லாம் இதனை எல்லாம் எப்பயோ பார்த்தாச்சு, என்று சொல்ல தூண்டியது.

இழுவை திரைகதை, வில்லன் யாருங்க இப்படி சோப்லங்கி போல இருக்குறாரு,என்ன தான் யா சொல்ல வர்றீங்க, என்று கேட்க வைத்து விடுகிறார்கள். ரிக்ளைநிங் சோபாவில் படுத்து சில நேரங்களில் எப்படி கண் அசந்தேன் என்று கூட தெரியாத அளவு தூக்கம் எல்லாம் வந்து பொறுமையை சோதித்து விடுகிறார்கள்.

இத்தனைக்கும், எல்லா 007 படங்களில் வருவது போல அட்டகாசமான Aston Martin கார், வாட்ச் வெடிகுண்டு, நிறைய பெண்கள் என்று அனைத்தும் இருந்தும் எதோ இல்லாதது போன்ற உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை.


படம் முடிந்ததும் எனக்கு தோன்றியது இது.  ஒரு நடிகருக்கு அல்லது கேரக்டருக்கு என்று ஒரு ஆரோ அல்லது மாய பிம்பம் மக்கள் உருவாக்கி வைத்து இருக்கிறார்கள். அதில் பொருந்த முடியாத அளவு அவர்கள் இருப்பின் அல்லது அந்த படம் இருப்பின், அது எவ்வளவு பெரிய நடிகர் நடித்து இருப்பினும் அல்லது எவ்வளவு செலவு செய்து மார்க்கெட்டிங் செய்து இருப்பினும் வெற்றி பெறாது.

இன்னொரு விசயமும் உண்டு, அது, இது போன்ற நடிகர்களுக்கு அல்லது கேரக்டருக்கு அவர்களின் முந்தய படங்கள் தான் எதிரி அல்லது இலக்கு. எப்படி "கத்தி","துப்பாக்கி" அளவு 
"புலி" யும் அதே அளவு இருக்கும் என்று ட்ரைலர் மூலம் எதிர்பார்ப்பை எகிற வைத்து படம் அது போல இல்லை என்றவுடன் மக்கள் கடுப்பானார்களோ. அதே போல, "Quantum of Solace", "Casino Rayale", "Skyfall" அளவு இருக்கும் என்று எதிர்பார்ப்பில் "Spectre" அளவை எகிற வைத்து கடைசியில் சவச்சவ படம் கொடுத்தது மன்னிக்க முடியாதது என்று நினைக்கிறன். Forbes பத்திரிக்கை, இதுவரை வந்த ஜேம்ஸ் பாண்டு படங்களில் இது தான் மரண மொக்கை என்று சொல்லி இருக்கிறது. எப்படியோ..
போட்ட காசையாவது எடுப்பாங்களான்னு பார்க்கலாம்


நன்றி

டிஸ்கி
இது இரண்டு படங்கள் குறித்த என்னுடைய கருத்துக்கள் மட்டுமே. பொதுப்படையானது அல்ல.